ஆதிரையை அவமானப்படுத்திய அருண்.. குணசேகரன் நடிப்பை அம்பலப்படுத்திய வளவன்..செம டுவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 4ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் கரிகாலனோடு வாழ்வதா அல்லது அவரை வேண்டாம் என்று சொல்வதா என்ற கேள்விக்கு ஆதிரை அருண் வீட்டிற்கு போய் இருக்கிறார்.

Ethirneechal Serial 2023 August 4th promo full update

அங்கு ஆதிரைக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அருண் பதில் கொடுக்க அதே நேரத்தில் குணசேகரனின் நடிப்பும் அம்பலமாகி இருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. இதுவரைக்கும் கரிகாலனுக்கு ஆதிரையை குணசேகரன் திருமணம் செய்து வைப்பதற்கு, எதற்காக இவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்ற ரகசியத்தை நேற்றைய எபிசோடில் ஜான்சிராணி போட்டு உடைத்து இருக்கிறார்.

ஆதிரையை கரிகாலனுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக கல்யாண மண்டபத்தை கதிர் பெயரில் கரிகாலனின் அப்பா கையெழுத்து போட்டு கொடுத்ததாக ஜான்சி ராணி மொத்த உண்மையையும் உடைத்திருக்கிறார். அதுபோல இனி கரிகாலனோடு ஆதிரையால் வாழ முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு ஆதிரை இன்று மாலைக்குள் என்னுடைய பதிலை நான் சொல்கிறேன் என்று சொல்ல அதுவரைக்கும் நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என்று வீட்டுக்குள்ளேயே ஜான்சி ராணி கம்பீரமாக இருக்கிறார்.

Ethirneechal Serial 2023 August 4th promo full update

அதே நேரத்தில் ஜனனி மற்றும் சக்தியை காணவில்லை என்று வீட்டில் இருக்கும் நந்தினியும் ரேணுகாவும் தேடி பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனியும் சக்தியும் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு இடங்களாக விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் அருணை சந்திக்க எஸ்கேஆர் வீட்டுக்கு ஆதிரை வந்திருக்கும் நிலையில் அருண் முகத்தில் அடிபட்டு இருக்கிறது.அதோடு கால் நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து வருகிறார். அப்போது எஸ்கேஆர் தம்பி அரசுவிடம் ஆதிரை "ப்ளீஸ் அங்கிள் புரிஞ்சுக்கோங்க" என்று கெஞ்சி கொண்டு இருக்க, சாருலதா யோசித்தபடி நிற்கிறார். அதற்கு அரசு, "இவா வந்து இருக்கான்னு தெரிஞ்சா, அண்ணன் என்ன சொல்லுவாருன்னு தெரியுமா..?" என்று கேட்கிறார்.

அதற்கு ஆதிரை அழுது கொண்டே இருக்க அருண், "ஆதிரை என்கிற பொண்ணு இனி என் வாழ்க்கையில் இல்ல, கிளம்ப சொல்லுங்க.." என்று அந்த இடத்தை விட்டு போக, ஆதிரை அழுது கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து வளவனிடம் பேசிக் கொண்டிருக்கும் குணசேகரன் எதார்த்தமாக கையை மேலே தூக்கி விடுகிறார்.

Ethirneechal Serial 2023 August 4th promo full update

அதற்கு வளவன்," என்னப்பா குணசேகரா கையை மேலலாம் தூக்குற?" என்று கேட்க, அது அப்படித்தான் அப்பப்ப மேல வரும் சார் என்று சொல்லிவிட்டு கையில் எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, எல்லாம் நடிப்பு சார். எல்லாம் ஒரு காரணம் இருக்கு என்று சொல்ல கதிர் அதிர்ச்சியடைகிறார். இப்படியாக பிரமோ முடிவு அடைந்து இருக்கும் நிலையில் இன்று பல டுவிஸ்டுகள் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+