எதிர்நீச்சல்: வீட்டுக்கு வந்த ஆதிரையால் அடுத்த பிரச்சனை.. கட்சி மாறிய அம்மா.. குணசேகரனின் பதில்
குணசேகரன் இடம் அவருடைய அம்மா ஆதிரைக்கு சார்பாக பேசுகிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 10 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
மருத்துவமனையில் இருந்து ஆதிரை வீட்டிற்கு வந்து இருக்கிறார்.
ஆதிரையின் நிலைமையை பார்த்து உனக்கு மனம் மாறவில்லையா என்று விசாலாட்சி குணசேகர் இடம் கேட்கிறார்.
எனக்கு குடும்பம் மானம்தான் முக்கியம் என்று குணசேகரன் பதில் கூறுகிறார்.

இன்றைய ப்ரோமோ
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய பிரமோவில் ஆதிரைக்கு சார்பாக குணசேகரனிடம் விசாலாட்சி பேச அதற்கு குணசேகரன் எனக்கு குடும்ப மானம் தான் முக்கியம். மனசு மாறாது என்று பதில் கொடுக்கிறார். வீட்டிற்கு வந்த ஆதிரையிடம் ஏண்டி இப்படி பண்ணுனா என்று விசாலாட்சி கேட்க? எனக்கு எதுவுமே பிடிக்கல மா என்று ஆதி சொல்ல பிறகு ஆதிரைக்கு சார்பாக ஜனனி விசாலாட்சி இடம் நீங்க ஆதிரையின் மனசை புரிஞ்சு நடத்துக்கோங்க உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார்.

அரசுவின் வில்லத்தனம்
ஏற்கனவே நேற்றைய எபிசோடில் அருண் உடைய அண்ணன் அரசு மருத்துவமனைக்கு சென்று அதிரையிடம் உங்களுக்கும் அருணுக்கும் தான் திருமணம் நடக்கும். அதற்கு சப்போர்ட்டாக இனி அந்த வீட்டில் இருக்கும் மருமகள் நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்ல, அதற்கு ஜனனி, நந்தினி, ஈஸ்வரி மூவரும் சரி என்று ஆதிரையின் திருமணத்திற்கு நாங்கள் உதவுவோம் என சத்தியம் செய்கின்றனர். ஆனால் அதற்கு பிறகு அரசு குணசேகரனின் அப்பத்தாவிற்கு இருக்கும் 40% ஷேர் பற்றி விசாரிக்கிறார்.

சண்டையிடும் கதிர்
அடுத்ததாக வீட்டில் தாரா அம்மா வந்தால் தான் வீட்டில் தூங்குவேன் என்று அழுது அடம் பிடிக்க, அதற்கு ரேணுகா எவ்வளவு சமாதானம் கூறி நாளும் கேட்காமல் அழுது கொண்டிருக்கிறார். அப்போது கதிர் குழந்தையை தனியாக கூட்டிக்கொண்டு அறையில் அடைத்து வைத்துவிட்டு நந்தினிக்கு போன் செய்து குழந்தை பசியிலிருந்து அழுதுகிட்டு இருக்குது நீ எங்க போனாய் என்று திட்டுகிறார். மருத்துவமனையில் இருந்து பதறியபடியே நந்தினி இரவில் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் கதிர் வழக்கம் போல நந்தினி இடம் சண்டையிடுகிறார்.

அடுத்த பிரச்சனை
யாரோ ஒருத்திக்காக நீ உன் பெத்த பிள்ளையை பட்டினி போடுவியா? என்று நந்தினியை கதிர் கேட்ட அது உங்க தங்கச்சி என்று சொல்ல, அவ இஷ்டத்துக்கு செய்வா? அவள் எல்லாம் எனக்கு தங்கச்சியா என்று ஆதிரையையும், நந்தினியையும் கதிர் திட்டுகிறார். அப்போது ஞானம் இதை கேட்டு எந்த பதிலும் சொல்லாமல் இருக்க, குணசேகரனும் இங்கே நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்திருக்கும் ஆதிரையால் இனி அடுத்த பிரச்சனை தொடக்க இருக்கிறது.












Click it and Unblock the Notifications