தர்ஷினியிடம் உண்மையை உளறிய குணசேகரன்.. புது ரவுடி வைத்து ஆப்பு.. இயக்குனர் இதை கவனிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 29ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை கடத்தி வைத்திருப்பது குணசேகரன் தான் என்ற உண்மையை குணசேகரனே போன் மூலமாக தர்ஷினி இடம் உளறி இருக்கிறார்.

அதே நேரத்தில் இனி தர்ஷினி எப்படி அங்கிருந்து தப்பிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் குணசேகரனுக்கு இனி தண்டனை கிடைக்குமா? இல்லையா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

 Ethirneechal Serial 29th february 2024 promo full update

எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு இது சோதனையான காலம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் கடந்த வாரத்தில் டிஆர்பியில் முன்னேறி இருந்த எதிர்நீச்சல் இப்போது மீண்டும் ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது. அதற்கு காரணம் தர்ஷினியின் கடத்தல் நாடகம் பல மாதங்களாக இழுத்துக் கொண்டு இருப்பது தான். அதே நேரத்தில் இதுவரைக்கும் தர்ஷனியை கடத்தியது யார் என்றே தெரியாமல் இருந்த நிலையில் இப்போது அது குணசேகரன் தான் என்று உண்மை உடைபட்டு இருக்கிறது.

அதுவும் நேற்று குணசேகரன் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் ரவுடி பணம் கேட்டபோது கொடுக்காததால் அந்த ரவுடி தன்னுடைய கோபத்தை தர்ஷினியிடம் காட்டிவிட்டு அங்கேயே ஃபோனை போட்டுவிட்டு போயிருந்தார். இப்படியான நிலையில் இன்று அந்த போனுக்கு குணசேகரன் போன் பண்ணி இருக்கிறார். அப்போது தர்ஷினி அங்கேயே இருக்கட்டும் கரிகாலனோடு கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணி இருக்கிறேன் என்று குணசேகரன் சொல்ல தர்ஷினி இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதாக ப்ரோமோவில் காட்டப்படுகிறது.

ஆனால் நிஜத்தில் தர்ஷினி சுயநினைவில் தான் இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாரா? அல்லது போதை மருந்து கலந்து கொடுத்ததால் மயக்கத்தில் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாரா? என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதற்கான விடை இன்றைய எபிசோடில் தான் தெரிய வரும். ஏற்கனவே குணசேகரன் எவ்வளவோ தப்பு செய்தாலும் அதில் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

 Ethirneechal Serial 29th february 2024 promo full update

ஆனால் இந்த முறை தன்னுடைய சொந்த மகளையே கடத்தி வைத்து அவளுக்கு போதை மருந்து கொடுத்து தன்னுடைய மனைவிக்கு எதிராக பேச வைத்திருக்கிறார். இதனால் இந்த முறையாவது குணசேகரனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே குணசேகரன் வில்லன் தான் அவர் மனிதாபிமானம் இல்லாதவர் என்பதை எல்லாம் பல இடங்களில் இயக்குனர் காட்டியாச்சு. ஆனாலும் இந்த இடத்திலும் இப்போதும் அதுபோல குணசேகரன் தப்பிப்பது போல காட்டினால் இன்னும் ரசிகர்களை கடுப்பாக்கத்தான் செய்யும்.

தர்ஷினி காணாமல் போனதற்கும் ஜீவானந்தத்திற்கும் தான் அதிக தொடர்பு இருப்பது போன்று கதையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். இப்போது ஜீவானந்தம் போலீஸிடம் இருந்து தப்பித்து இருப்பதால் ஜீவானந்தம் தான் தர்ஷினியை கடத்தினார் என்று குணசேகரன் தப்பித்தால் கதை மேலும் சொதப்பல் ஆகிவிடும். இப்படியும் இந்த கடத்தல் கதை முடிவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

தர்ஷினிக்கும் கரிகாலனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திருமணத்தில் கடைசி தருணத்தில் தான் தர்ஷினி பற்றிய உண்மைகள் வெளியே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்னும் எத்தனை நாட்களுக்கு இதே கதையை உருட்ட போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 Ethirneechal Serial 29th february 2024 promo full update

அதுபோல குணசேகரன் தன்னுடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் ஊரையும் ஏமாற்றுபவர் என்பதை ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம். கிள்ளிவளவன் ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்த போது கூட அதற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இப்போது தன்னுடைய மகளை கடத்தி வைத்திருக்கும் ரவுடிக்கும் குணசேகரன் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி இருக்கும் நிலையில் ஒருவேளை அந்த ரவுடியால் தர்ஷினி தப்பிப்பதற்கு வாய்ப்பு இருப்பது போன்று கதையை கொண்டு போனால் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+