எதிர்நீச்சல் கிருஷ்ணாக்கு கிடைத்த புது வாய்ப்பு.. ஆரம்பமே அசத்தல்தான் போங்க.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கிருஷ்ணாவாக ஆர்ஜே நெலு அறிமுகமாகி இருக்கிறார்.
இலங்கையை சேர்ந்த ஆர்ஜே நெலு முதல் முறையாக தமிழ் சீரியலில் அறிமுகமாகி இருக்கும் நிலையில் அதைத்தொடர்ந்து தற்போது பிரபல டைரக்டர் ஒருவரை சந்தித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

நெலு ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்தும், இயக்கியும் இருக்கிறார். அதோடு சில ஷார்ட் பிலிம் இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் இப்போது இயக்குனர் வசந்த பாலனை தான் சந்தித்த விஷயத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சின்னத்திரை வட்டாரத்தில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் ஒரு சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் தான் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரி முத்து பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருந்தார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவருடைய மரணம் வந்துவிட்டது.

அதைத்தொடர்ந்து ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி அறிமுகம் ஆகி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சொந்த பெயர்களை மறந்து அவர்கள் நடித்துவரும் கேரக்டர்கள்தான் ரசிகர்களின் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே ஒரு சில நடிகர்கள் சிலரை வெள்ளி திரையில் நடித்து பிரபலமாகி இருந்தாலும் தற்போது இந்த சீரியலில் வரும் பெயரின் படித்தான் எல்லோரும் அவர்களை அழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலில் கதை வேகமாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதில் இதுவரைக்கும் இல்லாத வகையில் புதியதாக ஜனனியின் பெரியப்பா பையன் மற்றும் அவருடைய குடும்பம் என புதியதாக கதை நகர்ந்து வருகிறது. அதில் குணசேகரனுக்கு அடுத்தபடியாக கிருஷ்ணா என்ற கிருஷ்ண மெய்யப்பன் கேரக்டரில் ஆர்.ஜே நெலு அறிமுகமாகி இருக்கிறார்.
ஆர் ஜே நெலு இலங்கையை சேர்ந்தவர். அங்கு ஒரு சில திரைப்படங்களை நடித்தும் இயக்கியும் இருக்கும் நிலையில் அங்கு பிரபலமாக இருக்கும் சக்தி டிவியில் பணி புரிந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இப்போது முதல் முறையாக சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் அறிமுகம் ஆகி இருக்கும் நிலையில் தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் பிரபலம் அடைந்திருக்கிறார். இவர் நடித்த எபிசோடுகள் இரண்டு நாள் மட்டும் தான் ஒளிபரப்பாகி இருக்கிறது.
இனி குணசேகரனின் கோவில் திருவிழா நடந்து முடிந்த பிறகு ஜனனிக்கு பிரச்சனையாக கிருஷ்ணா கேரக்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிற்கு முக்கியத்துவமான கேரக்டரில் ஆர் ஜே நெலு நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று டைரக்டர் வசந்த பாலனை சந்தித்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் அடுத்து உங்களுடைய முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications