ஜீவானந்தம் கேரக்டர் எவ்வளவு நாளைக்கு? ரகசியத்தை உடைத்த இயக்குனர்..இனி கதை இப்படித்தானாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் கேரக்டரிலும் திருச்செல்வம் நடித்து வருகிறார்.

Ethirneechal Serial Jeevanandam character for how long? The director who broke the secret

அவர் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் கேரக்டர் எப்படி இருக்க போகிறது என்பது பற்றியும் இனி கதை எந்த மாதிரி பயணிக்க போகிறது என்பது பற்றியும் பேட்டியில் பேசியிருக்கிறார்.

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்கள் பாராட்டும் ஒரு சீரியல் ஆக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். அதற்கு காரணம் விறுவிறுப்பான கதை அமைப்பு மற்றும் காட்சி அமைப்புகளும் தான்.

எதிர்நீச்சல் சீரியலை பல வருடங்கள் கழித்து இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் ஜீவானந்தம் கேரக்டரில் திரு செல்வம் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் இயக்கிய கோலங்கள் சீரியலிலும் தொல்காப்பியன் என்ற முதன்மையான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த சீரியலில் ஜீவானந்தம் கதை தொடங்கிய போது ரசிகர்கள் இயக்குனர் இதிலும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து கூறி வந்தனர்.

ஆரம்பத்தில் ஜீவானந்தம் ஒரு கம்யூனிஸ்ட் போன்று காட்சிகள் அமைப்புகள் வந்து கொண்டிருந்தது. அதிகமாக சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களிடம் இருந்து அந்த சொத்துக்களை பிடுங்கி ஏழைகளுக்கு கொடுப்பது போன்று கதை தொடங்கிய நிலையில் இப்போது குணசேகரின் மனைவி ஈஸ்வரியின் முன்னாள் காதலனாகவும் ஜீவானந்தம் தொடர்கிறார். இந்த நிலையில் ஜீவானந்தம் கேரக்டர் எவ்வளவு நாட்கள் இந்த சீரியலில் இருக்கும் என்பது பற்றி சமீபத்தில் பேட்டியில் திருச்செல்வம் பேசியிருக்கிறார்.

Ethirneechal Serial Jeevanandam character for how long? The director who broke the secret

ஆரம்பத்தில் இந்த கதை தொடங்கும் போது ஜீவானந்தம் கேரக்டர் கொஞ்ச நாளைக்கு என்பது போன்று தான் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது கதையின் முக்கியத்துவத்திற்கு தகுந்தது போல கதை பயணிக்க தொடங்கி இருக்கிறது. இனி வரும் காலங்களில் கதை எப்படி போகிறதோ ரசிகர்களின் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது அது போலவே கதை பயணிக்கப்படும். அதிக நாட்கள் ஜீவானந்தம் கேரக்டர் இருக்காது என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே இப்போது குணசேகரன் மற்றும் ஜீவானந்தம் பிரச்சனைகள் தான் வலுவான கதை காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் இதை வைத்து பல மாதங்கள் கதை ஓடிவிடும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஈஸ்வரியின் முன்னாள் காதலன் என்ற விஷயத்தை குணசேகர்களுக்கு தெரிந்த பிறகுதான் கதை இன்னும் சூடு பிடிக்க போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+