எதிர்நீச்சல் ஜீவானந்தம் அணிக்குள் திடீர் சண்டை.. பர்ஹானாவால் கோபத்தில் கௌதம்.. வெளிவந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஜீவானந்தத்திடம் இருந்து சொத்துக்களை மீண்டும் பெறவேண்டும் என்று குணசேகரன் ஆடிட்டரிடம் பேசி புது வக்கீல் இடம் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal Serial Jeevanandham team Gauthamam and Farhana reels

அதே நேரத்தில் ஜனனி, சக்தி கொடுக்கும் இன்பர்மேஷன் படி இனி நான் சீக்கிரமாக ஜீவானந்தத்தை சந்திக்க போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இனி என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் இருக்கின்றது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே சீரியலின் கதையை யூகிக்க முடிகிறது.

Ethirneechal Serial Jeevanandham team Gauthamam and Farhana reels

ஏற்கனவே ஈஸ்வரி தன்னுடைய அப்பாவிடம் ஜீவானந்தம் பற்றி பேசி இருக்கையில் ஜீவானந்தம் என்ற பெயரை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் எங்கே என்று மறந்துவிட்டது என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி மற்றும் பர்ஹானா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் அதே இடத்தில் ஜீவானந்தமும் இருக்கிறார்.

இந்த நிலையில் அதைத்தொடர்ந்து இந்த சீரியலில் பர்ஹானா கேரக்டரில் நடிக்கும் ஜிபா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் கௌதம் பர்ஹானா மற்றும் புதியதாக சேர்ந்திருக்கும் பி ஏ உடன் அமர்ந்திருக்கின்றனர்.

அதில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய், யோகி பாபுவிடம் கேட்கும் டயலாக்கான, சரி நான் இல்லாத நேரத்துல என்னை பத்தி இப்படித்தான் பேசுவியா? என்று கௌதம் கேட்க அதற்கு பர்ஹானா மற்றும் புது பிஏ இருவரும் கௌதமிடம் "எப்படிப்பா உன்கிட்டயே சொல்ல முடியும்" என்று யோகி பாபு வசனத்தை பேச, அதில் கோபமான கௌதம் கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை தூக்கி எரிகிறார். இப்படியாக இவர்கள் ஜாலியாக வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வகையில் இந்த வீடியோவில் இவர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று யூகிக்க முடிகிறது. அதாவது ஈஸ்வரி மற்றும் அவருடைய அப்பா கிராமத்தில் இருக்கும் சொந்த இடத்திற்கு போயிருக்கின்றனர். அங்கு பிரச்சனை செய்வதற்காக ஜீவானந்தம் தன்னுடைய அணியோடு வரப் போகிறார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் இந்த எபிசோடு எப்போது வரும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+