Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ethirneechal: எதிர்நீச்சலில் குணசேகரனுக்கே ஆப்பு வச்சுட்டாங்களே! சக்தியை கடத்தியது யார்? செம சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் இப்போ குணசேகரன் ஓட பிளாஷ்பேக் (FLASHBACK) தான் பெரிய புயலை கெளப்பி விட்டுருக்கு! தேவகியோட சொத்தை ஆதி முத்து அபகரிச்சதையும், தேவகியை குணசேகரன் கொடூரமா கொலை பண்ணுனதையும் சாமியார் கண்ணதாசன் கிட்ட இருந்து தெரிஞ்சுக்கிட்டு, சக்தி செம டென்ஷன்ல இருக்காரு!

ஆனா, தேவகியோடப் பையன் ராணா எங்க இருக்கான்னு சக்தி கேட்டதுக்கு மட்டும் சாமியார் ஒரு வார்த்தை கூடச் சொல்ல மறுத்துட்டாரு. இந்த விஷயம் வீட்டுல இருக்குற ஜனனி, நந்தினி, ரேணுகா எல்லாருக்கும் தெரிஞ்சு, எல்லாரும் பதறிப் போயிருக்காங்க!

Ethirneechal serial suntv

குணசேகரனின் பிளான்

குணசேகரன் ராமேஸ்வரத்துல இருக்கிறத் தன்னோட ஆட்களுக்கு போன் போட்டுக் கேட்டப்போ, "சக்தி எங்ககிட்ட இருந்துத் தப்பிச்சு ஓடிட்டான்!"னு சொல்லி இருக்காங்க. இதைக் கேட்ட குணசேகரன் டென்ஷன் ஆகி, "நீ என்ன பண்ணுவியோ தெரியாது, அவனை மடக்கிப் பிடிச்சு, அவன்கிட்ட இருக்கிற ஆதாரங்களை எல்லாம் வாங்கிட்டு, அவனை அடிச்சு விரட்டுங்க!"ன்னு திரும்பவும் ஆர்டர் போட்டிருக்கார். சக்தியின் உயிருக்கு உண்மையிலேயே ஆபத்து வந்திடுச்சுன்னு தான் சொல்லணும்!

விசாலாட்சி வீட்டில் அதிர்ச்சி

இந்த சமயத்துல, அண்ணன் வீட்டுக்குப் போயிருந்த விசாலாட்சி வீட்டுக்குத் திரும்பி வந்துட்டாங்க. ஆனா, கூடவேத் தன்னோடத் தம்பி சாமியாரையும் கூட்டிட்டு வந்திருக்காங்க! முல்லைகிட்ட வீட்டு பிரச்சனைகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு உள்ளே போன விசாலாட்சி, மருமகள்கள் கிட்ட, "இது என் மகன் உழைச்சு சம்பாதிச்சு வாங்குனச் சொத்து!"ன்னு வழக்கம்போலப் பெருமை பேச ஆரம்பிக்கிறாங்க.

இதைக் கேட்டு நந்தினிக்குக் கடுப்பாகி, "எங்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்!"ன்னுச் சொல்ல, அப்போது திடீர்னு சாமியார் கூட வந்த அவருடையச் சிஷ்யனுக்குச் சாமி வந்திருக்கு! அவர் வந்து, "உங்கக் குடும்பத்துல ஒரு பெரிய உசுருப் போகப் போகுது!"ன்னு சொல்ல, அங்க இருந்த எல்லாரும் ஷாக் ஆகிட்டாங்க! விசாலாட்சி கூட, "யாருக்கு என்ன ஆகுமோ?"ன்னுப் பதறிப் போயிட்டாங்க!

சக்தியை கடத்திட்டாங்க

எல்லாரும் "ஐயோ சக்திக்கு ஏதாவது ஆகிடுமோ"ன்னு பதறிக்கிட்டு இருக்க, ராமேஸ்வரத்துல இருந்து கிளம்பி வந்த சக்தியை ஒரு ரவுடி கும்பல் சுத்தி வளைச்சு இருக்கு! அவங்க, சக்தியோட முகத்துல மயக்க ஸ்பிரே (SPRAY) அடிச்சு, அவரை கடத்திட்டுப் போறாங்க. குணசேகரன் ஆள் அனுப்பி, ஆதாரங்களை பிடுங்கிட்டு அடிச்சுத் துரத்தச் சொன்னாரு. ஆனா, இந்த ரவுடி கேங் சக்தி மேலக் கை வைக்கவே இல்லை. இதைப் பார்த்தா, இது குணசேகரன் ஆட்களா இருக்க வாய்ப்பே இல்லை! இது ராணா அனுப்பி வச்ச ஆட்களாத்தான் இருக்கணும்! குணசேகரனால சக்திக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு, ராணா அவரை காப்பாத்திக் கடத்தி இருக்க வாய்ப்பு இருக்கு!

இப்போ சக்தி எங்க இருக்காரு? ராணா தான் இந்த கடத்தலுக்குக் காரணமா?ன்னு பார்க்க, அடுத்த எபிசோடு வரைக்கும் வெயிட் பண்ணி பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+