சாவித்திரி எலும்பும் தோலுமாக? உயரத்தில் பறந்து, போதையில் வீழ்ந்த "கொடை வள்ளல்" சாவித்ரி: பிரபலம் நச்
சென்னை: திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு உண்மையான கொடை வள்ளல் என்றால் அது சாவித்திரிதான்" என்று தமிழா தமிழா பாண்டியன், பேட்டி ஒன்றில் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். அதேசமயம், நடிகையர் திலகம் சாவித்ரியின் கடைசிகால வாழ்வு குறித்தும் விரிவாக தெரிவித்துள்ளார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், 'ஜெமினி கணேசன் இல்லையென்றால், சாவித்திரி கிடையாது. அப்போது சாவித்ரியை சுற்றி மகளிர் அமைப்புகள், பணக்கார பெண்கள் இருப்பார்கள்.. இவர்கள்தான் அவரை படம் எடுக்க தூண்டிவிட்டனர். சிவாஜியை கதாநாயகனாக போட்டு, சொந்தமாக படம் எடுக்கறாங்க சாவித்திரி.. அப்போது சிவாஜியை படப்பிடிப்பில் நிறைய வேலை வாங்கறாங்க

சிவாஜி கணேசன்: சில சீன்களை அந்த படத்தில் சிவாஜி மாற்ற சொல்லியும், சாவித்திரி மாற்றவில்லை. இதனால், சாவித்திரிக்கும், சிவாஜிக்கும் தகராறு எழுகிறது. இவர்களுக்குள் நடுவே உள்ளே புகுந்து பஞ்சாயத்து செய்தார் ஜெமினி.
சாவித்ரியிடம், 'நான்தான் உன்னை படம் எடுக்க வேண்டாம்னு சொன்னேனே? சிவாஜியை வைத்து வேலை வாங்கும் அளவுக்கு உனக்கு டைரக்ஷன் தெரியாது' என்கிறார்.. அதற்கு சாவித்ரி, "நான் படம் எடுப்பதால் உங்களுக்கு பொறாமை" என்று பதிலுக்கு சொல்ல தம்பதிக்குள் பிரச்சனை வெடிக்கிறது.
கதையம்சம்: இதைப்பார்த்த சிவாஜி, தன்னால் எந்த பிரச்சனையும் வேண்டாம், என்று சொல்லி, அந்த படத்தை முழுமையாக நடிச்சு தந்தார்.. ஆனால், ஹிட் ஆக வேண்டிய அந்த படம், ஓடவில்லை. என்ன காரணமென்றால், கதை அம்சத்தில் பல குளறுபடிகள் இருந்தன.. இதை ஜெமினி கணேசன், பலமுறை சுட்டிக்காட்டியும் சாவித்திரி கேட்கவில்லை.. பெரிய தோல்வி அடைந்துவிட்டது.
இந்தோனேஷியா அரசாங்கத்தில், பாசமலர், பாவமன்னிப்பு. மிஸ்ஸியம்மா, 3 படங்களும் அவார்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.. அதனால் இந்தோனேஷியாவுக்கு செல்கிறார்கள் ஜெமினியும், சாவித்ரியும்.. அப்போது வெளிநாட்டு நடிகர்-நடிகைகளோடு தங்கி, பார்ட்டிகளில் கலந்து கொள்ள நேரிடுகிறது.
இந்தோனிஷயா: அப்போதுதான் இந்தோனேஷியாவில் முதன்முதலாக மது குடிக்க ஆரம்பிக்கிறார் சாவித்திரி... ஆனால், இந்தோனேஷியாவிலிருந்து வந்த பிறகும் மதுவை விடவில்லை சாவித்திரி.. ஜெமினி கணேசன் தடுத்தும்கூட சாவித்திரி மதுவை விடவில்லை. மதுப்பழக்கத்திலிருந்து விடுபடும்போது, திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டு, சாவிரியுடனானதொடர்பை துண்டித்து கொண்டார் ஜெமினி.
இதற்கு பிறகு, சாவித்திரி மலையாளத்தில் முதல்முதலாக கவர்ச்சி காட்டி நடிக்கிறார். இதனால் அதுவரை கட்டிக்காத்த மொத்த இமேஜூம் உடைந்துவிட்டது.. தெலுங்கிலும் டோட்டல் இமேஜ் அவுட், தமிழிலும் டோட்டல் இமேஜ், மலையாளத்தில் நடித்த முதல்படத்திலேயே கெட்டப்பெயர் கிடைத்துவிட்டது.
மரியாதை போய்விட்டது: மலையாள படத்தில் பணத்துக்காக ஏன் அப்படி நடிச்சே? இதுவரை கட்டிக்காத்த மரியாதை போச்சே? என்று சக நடிகைகள் சொன்னதை கேட்டு, சாவித்திரியால் ஜீரணிக்கவே முடியவில்லை.
பெங்களூரில், ரத்த அழுத்தம் அதிகமாகி, ஸ்ட்ரோக் ஏற்பட்டு, மயங்கி விழுந்து விட்டார்.. உடனே முதல் தகவல் சரோஜாதேவிக்கு தெரிய வருகிறது. எப்படியாவது சாவித்திரியை காப்பாத்துங்க என்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர சொல்கிறார். ஆனால், பாதி உடல் நலம் மட்டுமே தேறுகிறது.. இதற்கு பிறகு சென்னை வந்தும்கூட, மருந்து, மாத்திரைகளைவிட மதுவையே அதிகம் நாடினார் சாவித்ரி.. இதனால், மீண்டும் மீண்டும உடல்நிலை மோசமடைந்து, உருக்குலைந்து போய்விட்டது
வறுமை, பணமில்லை, சொத்துக்களும் ஏலம் போய்விட்டன.. எலும்பும் தோலுமாக சென்னை வீட்டில் படுத்து கிடந்தாங்க.. இது திரையுலகில் அத்தனை பேருக்கும் பெரிய அதிர்ச்சி..
கொடை வள்ளல்: ஆனால் மிகச்சிறந்த கொடை வள்ளல் சாவித்திரி.. குழந்தையை தூக்கிகொண்டுவந்து, எத்தனையோ பேர் வந்து உதவி கேட்பார்கள்.. யார் கேட்டாலும் பணம் தருவாங்க.. பிரதமர் நிதி, பாகிஸ்தான் நிதிக்காக தன்னுடைய நகை, பணம் எல்லாவற்றையும் அள்ளி அள்ளி தந்தார். அதற்கு கணக்கெல்லாம் பார்க்கவில்லை. திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு உண்மையான கொடை வள்ளல் என்றால் அது சாவித்திரிதான்" என்றெல்லாம் மேலும் பல்வேறு விஷயங்களை அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.
இந்தோனேஷியா: அப்போதுதான் இந்தோனேஷியாவில் முதன்முதலாக மது குடிக்க ஆரம்பிக்கிறார் சாவித்திரி... அங்கு பல நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் வந்திருந்ததால், பார்ட்டிகளில் கலந்து கொள்ள நேரிடுகிறது. ஆனால், இந்தோனேஷியாவிலிருந்து வந்த பிறகும் மதுவை விடவில்லை சாவித்திரி.. ஜெமினி கணேசன் தடுத்தும்கூட சாவித்திரி மதுவை விடவில்லை. மதுப்பழக்கத்திலிருந்து விடுபடும்போது, திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டு, சாவிரியுடனானதொடர்பை துண்டித்து கொண்டார் ஜெமினி.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications