கேப்ரில்லா நொந்துட்டாங்க.. இரவெல்லாம் அழுது.. அம்மாவிடம் அடி வேற.. "ஒருவரை குறை சொல்ல கூட்டமே உண்டு"
சென்னை: "நான் ஒல்லியாக இருக்கும்போதும் ட்ரோல் பண்ணாங்க.. இப்போது வெயிட் போட்டுட்டேன். இப்போதும் ட்ரோல் செய்றாங்க.. அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஒருத்தரை குறைகண்டுபிடிக்க ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று சின்னத்திரை நடிகை கேப்ரியல்லா தெரிவித்துள்ளார்.
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா... விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமானார்.. ஜோடி நம்பர் ஒன் 6வது சீசனில், டைட்டில் வென்றவர். பிறகு, அதே விஜய் டிவியில், "7 C" என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.

பிறகு பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.. அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியபோது, கேப்ரில்லாவின் துணிச்சலான முடிவை ரசிகர்கள் பலரும் பாராட்டினார்கள்..
இப்போதும் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.. ஈரமான ரோஜாவே சீரியல், சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள், போன்ற சீரியல்களில் நடித்து நடித்து, பெண்களின் பேராதவை பெற்று வருபவர்.
வீடியோக்கள்: சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட கேப்ரில்லா, அடிக்கடி தன்னுடைய நடன வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருவது வழக்கம். சமீபத்தில் பேட்டி ஒன்றில், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை குறித்து கேப்ரியல்லா கூறியிருந்தார்.. அதில் அவர், "நான் 10ம் வகுப்பு படிக்கும்போது அந்த சமயத்தில் என்னிடம் செல்போன் இல்லை.. அதிகம் படிப்பில் கவனம் செலுத்தியிருந்தேன். அப்போது, என்னுடைய போட்டோவை மார்பிங் செய்து விட்டனர்.
அந்த போட்டோவில் இருந்தது நான் இல்லை. ஒருவேளை நானா இருக்குமோ என்று தோன்றும் அளவிற்கு அந்த போட்டோ என்னை போல் இருந்தது. இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது.. 3 நாட்கள் ஸ்கூலுக்கு போகவில்லை.. பள்ளியில் என்னை அப்படி பார்த்தார்கள். அந்த சமயங்களில், மிகவும் கஷ்டப்பட்டேன்" என்று கேபிரில்லா வருத்தத்துடன் கூறியிருந்தார்.
மார்பிங் போட்டோ: இந்நிலையில், கலாட்டா பிங்க் யூட்யூப் சேனலுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார் கேப்ரியல்லா.. அந்த பேட்டியிலும் தன்னுடைய புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது குறித்து மிகுந்த வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
அந்த பேட்டியில், "நான் ஒல்லியாக இருக்கும்போதும் ட்ரோல் பண்ணாங்க.. இப்போது வெயிட் போட்டுட்டேன். இப்போதும் ட்ரோல் பண்றாங்க. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஒருத்தரை குறைகண்டுபிடிக்க ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
கமெண்ட்: என் உடம்பினை நான் தேர்ந்தெடுக்க முடியாது. எனக்கு இந்த மாதிரி உடல்வாகு வந்திடுச்சு. நான் சாதாரண ட்ரெஸ் போட்டாலும், மாடர்ன் ட்ரெஸ் போட்டாலும் எல்லாத்துக்கும் கமெண்ட் செய்கிறார்கள். எல்லாவற்றையும் ஆபாசமாகவே பார்க்க பலர் இங்கே உண்டு. ஆனால், நான் யாரையும் கண்டுக்கறது இல்லை. எந்த கமெண்ட்டையும் படிப்பதும் இல்லை.
நான் 10வது படிக்கும்போது, என் போட்டோவை மார்பிங் பண்ணி போட்டு, வைரல் ஆனது. வீட்டில் என் அம்மா செம அடி.. நான் ஸ்கூல் போகாமல் 3 நாட்கள் தூங்காமல் அழுதேன்.
வேதனை: என்னுடைய அம்மா, அந்த மார்பிங் செய்த போட்டோ பற்றி என்னுடைய ஸ்கூல் பிரின்ஸிபலிடம் சொன்னார்.. என்னுடன் படித்தவர்களே சிலர் அந்த மார்பிங் போட்டோவை நம்பினார்கள்.. ஆனால், உண்மையான நண்பர்கள் அப்படி எதுவும் நினைக்கல. அதற்கு பிறகுதான் இந்த விவகாரத்தை எப்படி டீல் செய்யணும்னு தைரியம் எனக்கு வந்தது என்றெல்லாம் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் கேப்ரியல்லா.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications