பாரதிகண்ணம்மா 2இல் ஜீ தமிழ் முன்னணி கதாநாயகியும் இருக்கிறாரா? வெளியான புகைப்படங்கள்
பாரதிகண்ணம்மா 2 சீரியலில் ரேஷ்மா முரளிதரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீசன் இரண்டில் ஜீ தமிழ் பூவே பூச்சூடவா சீரியல் கதாநாயகி ரேஷ்மா முரளிதரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாவது பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த அதே வினுஷா தேவி தான் கண்ணமாவாக நடிக்கிறார்.
கண்ணம்மாவின் தோழியாக ரேஷ்மா முரளிதரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மகிழ்ச்சியான முடிவு
விஜய் டிவியில் வரும் எதிர்பார்ப்பையும் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களையும் ஆரம்பத்தில் இருந்து பெற்ற சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் ஆகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த சீரியலின் முடிவு பல ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்துவிட்டது. ஆரம்பத்திலிருந்து இந்த சீரியலில் dna டெஸ்ட் என்ற ஒற்றை காரணத்தை மட்டும் வைத்தே சீரியல் இழுத்துக் கொண்டே நான்கரை வருடங்களை கடந்துவிட்ட நிலையில் இந்த சீரியலில் கடைசி முடிவு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக இருந்ததை தொடர்ந்து இந்த சீரியலை ரசிகர்கள் அதிகமாக மிஸ் பண்ணி வருவதாக கருத்து கூறி வருகின்றனர்.

சீரியல் நடிகர்கள்
இந்த நிலையில் இன்றிலிருந்து பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகன் பாரதியாக ரோஜா சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த சிபு சூர்யன் நடிக்கிறார்.
கண்ணம்மாவாக ஏற்கனவே நடித்து வந்த வினுஷா தேவி நடிக்கிறார். இந்த தகவல்கள் ப்ரோமோவில் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த சீரியலில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி பிரபலமான பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகி ரேஷ்மா முரளிதரனும் நடிக்க இருப்பதாக தற்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

ஒருவேளை இருக்கலாமோ
இதுவரைக்கும் கதாநாயகியாகவே நடித்து வந்த ரேஷ்மா முரளிதரன் இந்த இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இருக்கிறாரா? அல்லது ஏதேனும் கெஸ்ட் ஆக ஆரம்பத்தில் வர இருக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரேஷ்மாவின் ரசிகர்களின் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் இதைக் குறித்து இப்ப வரைக்கும் ரேஷ்மா முரளிதரன் எந்த உறுதியான தகவல்களையும் கூறவில்லை என்பதால் இது ஒரு வேலை பொய்யான தகவலாக இருக்கலாமோ என்று அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பதில் சொல்லவில்லையே
ஏற்கனவே ரேஷ்மா முரளிதரன் பூவே பூச்சூடவா சீரியலின் முடிவுக்கு பிறகு கலர்ஸ் தமிழில் அவருடைய காதல் கணவருடன் சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் திடீரென முடிக்கப்பட்டதும் தற்போது எந்த சீரியலிலும் அவர் நடிக்காமல் தான் இருந்து வருகிறார். ஏற்கனவே அவரும் ஷபானாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறி இருந்தனர். ஆனாலும் அந்த திரைப்படத்தைப் பற்றியும் தற்போது எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை நிஜத்தில் பயன்படுத்தி கொள்வாரா? என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
Youth Review : யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! கென் கலக்கினாரா? கலங்க வைத்தாரா? ரிவ்யூ இதோ -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications