படிப்பு வரல, பட்ட அடி! இப்போ பலருக்கு சொல்லி கொடுக்கிறேன்! சுந்தரி சீரியல் கேப்ரில்லா உருக்கம்
சென்னை: தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்பட உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகை கேப்ரியெல்லா செல்லஸ். தனது நடிப்புத் திறனால், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், சமீபத்தில் தனது சொந்த ஊரான திருச்சியில் உள்ள தனது வீட்டின் ஹோம் டூர் வீடியோவில், தனது வாழ்க்கைப் பயணம் குறித்துப் பல அறியப்படாத தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சின்னத்திரையில் ஒரு வெற்றிப் பயணம்
கேப்ரியெல்லாவின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது சன் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' என்ற தொடர். இந்தத் தொடரில் 'சுந்தரி தேவி' என்ற கிராமத்துப் பெண்ணாக, கருப்பாக இருக்கும் பெண் தன் நிறத்தால் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இந்தத் தொடர் 1000 எபிசோடுகளைக் கடந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. 'சுந்தரி' தொடரின் மூலம் கேப்ரியெல்லா, சிறந்த நடிகைக்கான பல விருதுகளைப் பெற்றார். இது அவரது நடிப்புத் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாக அமைந்தது. இந்தக் கதாபாத்திரம், அவரைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

சினிமாவில் ஒரு கௌரவமான இடம்
சின்னத்திரையில் நுழைவதற்கு முன்பு, கேப்ரியெல்லா சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2016-ல் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி' திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தது அவரது திரை வாழ்க்கையின் தொடக்கத்திற்கு உதவியது. பின்னர், 2019-ல் வெளியான 'ஐரா' திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது, 'சுந்தரி' தொடருக்குப் பிறகு, அவர் பல திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
படிப்பில் படுசுட்டி
தற்போது, தனது திருச்சியில் உள்ள வீட்டை வீடியோவில் காட்டிய கேப்ரியெல்லா, தனது சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவரது அம்மாவால் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த வீடு இன்றும் மாறாத பழமையான அழகைக் கொண்டிருக்கிறது. தனது பள்ளிப் படிப்பைப் பற்றியும் அவர் மனம் திறந்து பேசினார். "நான் சிறுவயதிலிருந்தே படிப்பு வராது. ஆசிரியர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகப் பல காரணங்களைக் கூறி நடித்திருக்கிறேன்" என்று வெளிப்படையாகப் பேசினார். அப்போதெல்லாம் ஒரு பொழுதுபோக்காக இருந்த நடிப்பு, இன்று அவரது வாழ்க்கையாகவும், தொழிலாகவும் மாறியுள்ளது என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நாடகப் பள்ளியை நடத்தும் கேப்ரியெல்லா
கேப்ரியெல்லா செல்லஸ், நடிப்பைத் தாண்டி, ஒரு நாடகப் பள்ளியை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இது அவரது நடிப்புத் திறனை மேலும் வளர்த்துக்கொள்வதோடு, புதிய கலைஞர்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது. இந்தத் தகவல், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மேலும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications