Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாந்திக்காக பங்களாவை கட்டி.. பத்திய சாப்பாடு எடுத்து வந்த கவுண்டமணி.. தாங்கிய அன்பு மனைவி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல காமெடி கிங் கவுண்டமணியின் மனைவி சாந்தி, கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி இறந்தார் என்று சிலர் சொல்கிறார்கள்.. அதெல்லாம் தவறான தகவல்.. பண நெருக்கடி என்பது கவுண்டமணி குடும்பத்துக்கு கிடையவே கிடையாது என்கிறார் பத்திரிகையாளர் சபிதா ஜோசப். அத்துடன், கவுண்டமணி குறித்து பரவி வரும் சில தகவல்களுக்கும் விளக்கம் தந்து பேட்டி தந்திருக்கிறார் சபிதா ஜோசப்.

Sakthi Cine News என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "காமெடி நடிகர்களில் சூப்பர் ஸ்டார் கவுண்டமணி.. ரொம்ப கஷ்டப்பட்டுதான் சினிமாவில் நடிக்க வந்தவர். அவரது இயற்பெயர் சுப்பிரமணி.. நாடகங்களில் கவுண்ட்டர் அடித்துக் கொண்டே பேசியதால், கவுண்டமணி என்று பெயர் வந்தது..

Television Goundamani Shanthi

விஐபிகள் குடும்பம்

நாடகங்களில் 25, 30 ரூபாய் மட்டுமே அப்போது சம்பளம் தருவார்கள்.. சாந்தியம்மாவும் அப்போது நாடகங்களில் நடித்து கொண்டிருந்தார். அப்போது சாந்தியம்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு சென்னை தேனாம்பேட்டையில் சாதாரண ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

தான் கஷ்டப்பட்டாலும், குடும்பத்தை கஷ்டப்படாமல் பார்த்துக் கொண்டார். ஒருகட்டத்தில் சினிமாவில் வளர்ந்தபிறகு மனைவியை மகாராணி போல வைத்திருந்தார்.. மகள்களையும் இளவரசி போல பார்த்துக் கொண்டார்..

தன்னுடைய குடும்பத்தை கவுண்டமணி வெளியே காட்டவில்லை என்பார்கள்.. ஆனால் மற்றவர்களுக்கு அது தேவையில்லாதது.. குடும்ப உறுப்பினர்கள் வெளியே வரும்போது கூட்டம் சேரலாம், யாராவது கடத்தி கொண்டும் போகலாம்.. அதனால்தான் பல விஐபிகள் தங்கள் குடும்பத்தினரை வெளியே காட்ட மாட்டார்கள். வெளியில் யாரிடமும் குடும்பத்தினர் பற்றி பேசவும் மாட்டார் கவுண்டமணி. பத்திரிகையாளரக்ளுக்கு பேட்டிகளையும் தர மாட்டார்.

பக்தி, குலதெய்வம்

முன்பெல்லாம் தினமும் வுட்லேண்ட்ஸ் ஓட்டலில் மாலை 4 மணிக்கு தோசை ஏதாவது சாப்பிட்டு போவார்.. ஒருமுறை கவுண்டமணிக்கு மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டது. அப்போது அவரது மனைவி கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார். அதறகு பிறகு ஷூட்டிங் எங்கு நடந்தாலும் பத்திய சாப்பாடு தயாரித்து அனுப்பி வைத்துவிடுவார்.. அப்போது ஜீன்ஸ் படத்தின்போது 40 நாள் கால்ஷூட் கேட்டபோது, உடல்நல குறைபாடு காரணமாக மறுத்துவிட்டார் கவுண்டமணி.

கவுண்டமணி கடவுள் மறுப்பாளர் என்பார்கள்.. அப்படியெல்லாம் கிடையாது. மூடநம்பிக்கைகள் கூடாது என்றுதான் சொல்வார்..அவருக்கும் பக்தி, குலதெய்வம் உண்டு.. அதேபோல, கவுண்டமணிக்கு பண நெருக்கடி இருந்தது, அதனால்தான், சாந்திக்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்கிறார்கள்.. அதெல்லாம் தவறான தகவல்.. பண நெருக்கடி என்பது அவருக்கு கிடையவே கிடையாது..

ஆசை ஆசையாக காத்திருந்த கவுண்டமணி

10 படங்கள் ஹீரோவாக நடித்ததுடன், ஒருநாளைக்கு 2 லட்சம் வரை சம்பளம் பெற்றார். அத்தனையையும் மனைவியிடம் கொண்டு போய் தருவார்.. சாந்தியம்மாதான் அனைத்து நிர்வாகத்தையும் கவனித்து கொள்வார்..

கவுண்டமணி சம்பாதித்து பணத்தை மனைவியிடம் தருவதோடு சரி, அதில் தலையிட்டதில்லை.. மனைவி இறப்பதற்கு முன்பு ஒரு பெரிய பங்களா கட்டி வந்தார்... அதில் மனைவியுடன் குடியேறலாம் என்று நினைத்தார். ஆசை ஆசையாக அந்த பங்களா கட்டி முடித்து, குடிபோவதற்குள் சாந்தியம்மா இறந்துவிட்டார்.. மனைவியின் இழப்பிலிருந்து அவர் மீளவில்லை.. நிறையவே கலங்கி போயிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+