ரகசியம் முக்கியம்.. ‘கைதட்ட’ தனி குரூப் ரெடி செய்து வைத்துள்ள பெரியவீட்டு டீம்!
பெரிய வீட்டு நிகழ்ச்சிக்காக தயாரிப்புக் குழு புத்திசாலித்தனமான யுக்தியைக் கையாண்டு வருகிறார்கள்.
சென்னை: தனியார் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பெரிய வீட்டு நிகழ்ச்சியில் ரகசியங்கள் வெளியே கசிந்துவிடாமல் இருக்க தயாரிப்புக் குழு புத்திசாலித்தனமான காரியம் ஒன்றை செய்து வருவது தற்போது தெரிய வந்துள்ளது.
அதாகப்பட்டது, கடந்தமுறை பெரிய வீடு நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து, முடியும் வரை ஊரெங்கும் அதைப் பத்தித் தான் பேச்சு. யார் எதைப் பேசினால், கடைசியில் பேச்சு செல்வதென்னவோ அந்த நிகழ்ச்சி பற்றியதாகத் தான் இருந்தது.

இந்நிலையில், இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி மீண்டும் தொடங்க இருக்கிறது. எனவே, இனிவரும் 100 நாட்களுக்கு, அவ்வீட்டில் வாழ்வோரின் பிரச்சினைகளை தங்கள் பிரச்சினையாகவே மக்கள் பாவித்துக் கொண்டு பேச ஆரம்பித்து விடுவர்.
சரி விசயத்துக்கு வருவோம்.. இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் நடுநாயகமான தலைவர் தோன்றி பேசுவார். அப்போது முப்பதுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமர்ந்திருப்பர். ஆனால், நிஜத்தில் அவர்கள் தாமாக அதில் பங்கேற்க வந்த பொதுமக்கள் கிடையாதாம். தயாரிப்புக் குழுவே இதற்கென தேர்வு செய்து அவர்களை மட்டுமே அழைத்து வந்து அரங்கை நிறைப்பார்களாம்.
ஏனெனில் படப்பிடிப்பு முந்தைய நாளே செய்யப்பட்டு, நிகழ்ச்சி மறுநாள் இரவு தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். எனவே, படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் யாரும், நிகழ்ச்சியின் அன்றைய வார ரகசியத்தை உடைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடாம்.
முன்னதாகவே இது தான் நடக்கப் போகிறது என தெரிந்து விட்டால், மக்களுக்கு நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யம் கெட்டு விடும் என முன்னேற்பாடாக இந்த கூட்டத்தை தயார் செய்து வைத்துள்ளதாம் தயாரிப்புக் குழு.
யோசன மஞ்சி வாண்டு தான்...!
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications