விதிகளை மீறி இருந்தாலும், ஷெரினாவிற்கு இவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறதா!? வெளியான தகவல்கள்
சென்னை: பிக் பாஸ் சீசன் ஆறு தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஷெரினா கடந்த வாரம் எலிமினேஷன் ஆகி வெளியேறி இருக்கிறார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது வாங்கிய சம்பள விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சதவீதம் சம்பளமாக பெற்று கொண்டு தான் உள்ளே இருக்கின்றனர். எந்த நிலையில் 25 நாட்கள் உள்ளே இருந்த ஷெரினா பெற்ற மொத்த சம்பளம் ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருப்பம் தெரிவித்த போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோவாக ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. முதல் சீசனில் இந்த நிகழ்ச்சி எதிர்பார்க்காத வகையில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக போட்டியாளர்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர் .அந்த வகையில் நடந்து கொண்டிருக்கும் ஆறாவது சீசனில் கலந்து கொள்வதற்காக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களுடைய விருப்பங்களை வீடியோவாக பதிவு செய்து பிக் பாஸ்க்கு அனுப்பி இருந்தார்களாம். அதில் 21 போட்டியாளர்களை மட்டுமே செலக்ட் செய்து நிகழ்ச்சியை தொடங்கி இருக்கின்றனர்.

பொம்மை டாஸ்கால் வந்த வினை
கன்னட நடிகையாகவும் மாடலிங் பெண்ணாகவும் இருக்கும் ஷெரினா இந்த நிகழ்ச்சியில் அந்த 21 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளராக அறிமுகமானார். ஆரம்பமான புதியதில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் பேன்ஸ் பேஜ்களை தொடங்கி இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர் .ஆனால் இவருக்கு பொம்மை டாஸ்க் மூலமாக அதிகமான நெகட்டிவ் கருத்துகள் கிடைக்க தொடங்கிவிட்டது.

வேற மொழி கலந்துரையாடல்
பொம்மை டாஸைக்கில் இவருடைய விளையாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லாமல இவர் ஓவர் ஆக்டிங் செய்து விட்டார் என்று இவர் மீது நெட்டிசன்கள் கோபத்தில் மீம்ஸ்களை வெளியேற்றி வெளியிட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இவர் அதிகமாக மலையாளத்தில் ஆயிஷாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் இவர் பேசுவது தங்களுக்கு புரியவில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்ததன் தொடர்ச்சியாகவே கமல் கடந்த வாரம் இவருக்கு கடுமையாக மேடையில் கண்டிப்பு கொடுத்து இருந்தார் .

சம்பளம் இவ்வளவாம்
இவருக்கு மட்டுமல்லாமல் வேறு யாரும் இப்படி பேசக்கூடாது என்றும் கமல் அறிவுறித்து இருந்தார். இந்த நிலையில் ஓட்டிகளின் அடிப்படையில் குறைவாக ஓட்டு பெற்றிருந்த ஷெரினா கடந்த வாரம் வெளியிட்ட பட்டார். ஆனால் இவர் இதுவரைக்கும் 28 நாட்கள் இருந்திருக்கிறார் ஒரு நாளைக்கு இவர் 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றுக் கொண்டிருந்தாராம். ஆனால் கிட்டத்தட்ட இவர் இருந்த 28 நாட்களுக்காக கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டுதான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications