Idhayathai Thirutathe Serial: பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று.. இதயத்தை திருடாதே!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இதயத்தை திருடாதே என்று புது சீரியலை ஒளிபரப்ப இருக்கிறார்கள். தொலைக்காட்சி சீரியல்களுக்கு எப்போதுமே திங்கள் அன்றுதான் லான்ச் தினமாக இருக்கும்.
ஆனால், புதிதாக கலர்ஸ் தமிழ் டிவி காதலர் தினத்துக்கு என்று வெள்ளி கிழமை வாரத்தின் இறுதி நாள் என்று கூட பார்க்காமல் காதல் சீரியல் இதயத்தை திருடாதே என்கிற புது சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது. அதற்கான ப்ரோமோவும் தற்போது வெளியாகி வருகிறது.
காதலர் தினத்துக்கு எதாவது ஒன்றிரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அன்றைய நாளை நினைவு படுத்துவார்கள். இப்போது புதிதாக சீரியல்களை லான்ச் செய்யத் துவங்கி இருப்பது வரவேற்கத் தக்கதோ இல்லையோ... சீரியல்கள் வரிசை எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் அதிகமாகி வருகிறது.
இதயத்தை திருடாதே
நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வெளிவந்த படம் இதயத்தை திருடாதே. இந்தப் படத்தை காதலர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்தனர். அனைத்து வயதினரும் கூட இந்த திரைப்படத்துக்கு தங்களது ஆதரவை கொடுத்து, படத்தை விரும்பிப் பார்த்து வந்தனர். தமிழ், தெலுங்கு என்று சில மொழிகளில் இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம்.
சினிமா டைட்டில்
இது போல் வெற்றி பெற்ற படங்களின் டைட்டில்களை தொலைக்காட்சி சீரியல்களின் டைட்டிலாக வைத்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது, அந்த சீரியல் மக்களிடம் வெகுவாக ரீச் ஆகிவிடுவதாக தற்போது சானல்கள் நம்புகின்றன. அதே போலத்தான் நிஜத்திலும் நடந்து வருகிறது. இதை ஜீ தமிழ் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி, விஜய் டிவி வழக்கமாக்கி கொண்டுள்ளன. கலைஞர் டிவி, ஜெயா டிவி, பாலிமர் டிவி, ராஜ் டிவி, ஏன் சன் டிவி கூட ஒன்றிரண்டு சீரியல்களுக்கு இப்படி டைட்டில் வைப்பதை ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளன.
நீதானே என் பொன்வசந்தம்
ஜீ தமிழ் டிவியில் நீதானே என் பொன்வசந்தம் என்கிற டைட்டிலில் ஒரு சீரியலை விரைவில் என்று ப்ரோமோ போடுகிறார்கள். இதில் தூய நரையிலும் காதல் மலருமே..சின்னத்திரை இதுவரை கண்டிராத காதல் களம். வெகு விரைவில். என்று போடுகிறார்கள். அதாவது காதலிக்கும் வயதை கடந்த ஒருவரின் காதல் கதையாம் இது,
போட்டியில் சானல்கள்
முன்பு எல்லாம் தொலைக்காட்சி சானல்கள் நிகழ்ச்சி, அதாவது ரியாலிட்டி ஷோக்களுக்குத்தான் போட்டா போட்டி போட்டுக்கொண்டு இருந்தன. இப்போது யார் என்ன ரியாலிட்டி ஷோக்கள் நடத்தினாலும், அதற்கு போட்டி கொடுப்பது என்பது டஃப் என்றும், வீணான வேலை என்றும் நினைக்கிறார்கள், போலும். போட்டியாக சீரியல்கள் ஆரம்பித்தால் மட்டுமே ரேட்டிங்கில் வர முடியும் என்று சானல்கள் கணித்து அதற்கேற்ப இயங்கி வருகின்றன.