Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகார்த்திகேயன் மேட்டரை விடுங்க! இமானின் வாழ்க்கையில் அவங்களுக்குத்தான் முதலிடமாமே! அமலி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் டி இமானின் மனைவி தனது கணவர் அவரை எப்படி அழைப்பார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு லியோ படம் குறித்த ஹைப்புகள் எகிறி கொண்டிருந்த நேரம் பார்த்து திடீரென இமான் டிரென்ட்டானார். அவர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் யதார்த்தமாக அவர் பேசியுள்ளார்.

Immans wife Amali says about what is the biggest thing in his life?

திடீரென நெறியாளர் ஏன் இப்போதெல்லாம் சிவகார்த்திகேயனின் படத்திற்கு இசையமைப்பதில்லை என கேட்டார். அதற்கு இமான் சொன்ன பதில்தான் இன்று வரை டிரென்ட்டாகி வருகிறது.

இமான் கூறுகையில் இனி சிவகார்த்திகேயனோடு சேர்ந்து பணியாற்றுவது கனவில் கூட நடக்காத காரியம். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். எல்லா விஷயத்தையும் சொல்லிவிடலாம். ஆனால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும். அதனால் என்னால் எதையும் முழுவதுமாக சொல்லிவிட முடியாது.

இனி அடுத்த ஜென்மத்தில் நான் இமானாகவும் அவர் சிவகார்த்திகேயனாகவும் பிறந்தால் சேர்ந்து பணியாற்ற வாய்ப்புண்டு. இந்த ஜென்மத்தில் அது நடக்காது என சொல்லிவிட்டார். இதன் மூலம் பலருக்கு சிவகார்த்திகேயனால்தான் இமானுக்கும் அவருடைய முதல் மனைவி மோனிகாவுக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டது என கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் இமான் என்ன கூறுகிறார் என்பதே பலருக்கு புரியாத நிலையில் தாமாக ஓடி வந்து சிவகார்த்திகேயனுக்கு மோனிகா கான்டாக்ட் சர்ட்பிகேட் கொடுத்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன் ஒரு ஜென்டில்மேன், என்னை விவாகரத்து செய்ய வேண்டாம் என இமானிடம் அவர் அறிவுறுத்தினார். அது முதல் இமானுக்கு சிவகார்த்திகேயனை பிடிக்கவில்லை. அதனால்தான் இமானை இப்படியெல்லாம் பேசி வருகிறார் என்றார்.

இந்த நிலையில் இமானின் குடும்ப நண்பர் குட்டி பத்மினி நடந்தது என்ன என்பது குறித்து அவருடைய யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார். மேலும் மோனிகா இந்த விவகாரத்தில் பொய் கூறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது ஒரு புறமிருக்க தற்போது இமானின் இரண்டாவது மனைவி அமலி ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் எப்போதும் இமானை வீட்டில் அத்தான் என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை ஆசையாக அம்மு என அழைப்பார், அவர் மிகவும் ரொமான்டிக்கான மனிதர். நிறைய சர்பிரைஸ்களை கொடுப்பார். அவர் மிகவும் அமைதியானவர். எப்போதும் சாந்தமாகவே இருப்பார். அதனால் அவர் செய்யக் கூடிய செயல்கள் அனைத்திலுமே அன்பு என்பது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

அவரது வாழ்க்கையில் முதலில் மகள் நேத்ராவுக்குத்தான் முதலிடம் (இவர் அமலியின் மகள்). இரண்டாவது இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். மூன்றாவது நான். அவருக்கு முதன்முதலில் நான் பரிசாக கொடுத்தது நேத்ராவின் பல்லுதான். சிறு வயதில் விழுந்த நேத்ராவின் பற்களை சேமித்து வருகிறேன். அதில் ஒன்றை அவரிடம் கொடுத்து இது விலை மதிப்பில்லாதது என கூறினேன். இவ்வாறு அமலி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+