Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sundari Neeyum Sundaran Naanum: ஒரு அரசியல்வாதியைப் பார்த்து கேட்கற கேள்வியாம்மா இது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் தமிழ் வேலுவைப் பார்த்து கேட்கும் கேள்விக்குத்தான் ஒரு அரசியல்வாதியைப் பார்த்து கேட்கற கேள்வியாம்மா இதுன்னு பதிலுக்கு கேட்கிறான்.

தமிழ் அப்படி என்ன பெரிய கேள்வி கேட்டு இருப்பா வேலுவிடம்? திருமணம் ஆகி வேலுவும் தமிழும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். வேலு ஒரு அரசியல்வாதி.. தமிழ் தனியார் உதவி பெறும் பள்ளியை நடத்தி வருகிறாள்.

வேலுவின் பாட்டியாக நடிகை லதா நடிச்சு இருக்காங்க. இவங்கதான் தமிழை வீட்டில் இருக்கக் கூடாதுன்னு வீட்டை விட்டு வெளியில் அனுப்பிடறாங்க.

பாட்டி சொல்லைத் தட்டாதே

பாட்டி சொல்லைத் தட்டாதே

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் பாண்டியராஜன், ஆச்சி மனோரமா நடித்து புகழ்பெற்ற பாட்டி சொல்லைத் தட்டாதே படம் போல ஒரு கதை. எப்போதும் தன்னை வளர்த்த பாட்டியின் மீது உயிரையே வச்சு இருக்கான் வேலு. பாட்டிதான் ஆசையா தமிழை வேலுவுக்கு கல்யாணம் செய்து வச்சாங்க. ஆனால், துரோகம் பண்ணிட்டா தமிழ்னு இப்போ வீட்டை விட்டு வெளியில் அனுப்பிட்டாங்க.

ஆசை மனைவி

ஆசை மனைவி

ஆசை மனைவி தமிழுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் முன்னரே பிரிச்சு வச்சுட்டாங்க பாட்டி. ஆனால், பாட்டி சொல்லையும் தட்ட முடியலை. ஆசை மனைவியையும் ஒதுக்கி வைக்க முடியலை. தமிழிடம் ஒரு காதலன் போல துரத்தி துரத்தி வந்து பேச முயல்கிறான். ஆனால், சித்தி பாட்டி முன்னால் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போகிறான்.

மனைவியை கடத்தி

மனைவியை கடத்தி

ஆசை மனைவி தமிழிடம் மனம் விட்டுப் பேச எத்தனையோ முயற்சி செய்தும் முடியவில்லை. அவளை வாயைப் பொத்தி காரில் தூக்கிப் போட்டு கடத்திகிட்டு வந்து தோட்டத்து வீட்டில் அவளிடம் பேச முயல்கிறான்.அவள் கையில் தேங்காயை வைத்துக்கொண்டு, இவனை அடிப்பது போல நிற்கிறாள்.

படக்கென்று காலில்

படக்கென்று காலில்

தமிழ் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்...உலகத்தில் பொண்டாட்டியை கார் வச்சு கடத்தின முதல் புருஷன் நானாத்தான் இருப்பேன்.. தயவு செய்து என்னை கொஞ்சம் பேசவிடுன்னு கெஞ்சினவன்.. இப்போதும் நீ முரண்டு பண்ணினே..என்று அதட்டல் போடறான். என்னடா பண்ணுவே.. என்னடா பண்ணுவேன்னு தமிழ் கேட்க...படக்குன்னு காலில் விழுந்துட்டான்.

வெட்கம் மானம்

வெட்கம் மானம்

கொஞ்சம் கூட வெட்கம், மானம் சூடு சொரணை இல்லையா உனக்குன்னு தமிழ் கேட்கிறாள். அதற்குத்தான் ஒரு அரசியல் வாதியைப் பார்த்து கேட்கற கேள்வியாம்மா இதுன்னு கேட்கிறான்..கேட்க கூடாத கேள்வியைத்தான் ஒரு கட்சியில் இருக்கும் இளைஞன் வேலுவை பார்த்து தமிழ் கேட்டுவிட்டாளோ...?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+