ஜெகதீஷ், ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்க! விஜய் கரூரில் கூப்பிட்ட நபர் யார் தெரியுமா? அவரா இந்த பிரபலம்
சென்னை: கரூர் சம்பவ அதிர்வலைகள் இன்னும் அடங்காத நிலையில், தவெக விஜய் குறித்த விமர்சனங்களும் பெருகி கொண்டே இருக்கிறது.. தவெக கட்சியை பெரும்பாலான இணையவாசிகளும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.. இந்நிலையில், விஜய் தற்போது என்ன மனநிலைமையில் உள்ளார் என்று, மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய வீடியோவில் தெரிவித்துள்ளார். அத்துடன் தவெகவிலுள்ள ஜெகதீஷ் யார் என்பது குறித்தும் விவரித்துள்ளார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "கரூர் சம்பவத்துக்கு காரணம் என்ன? யார் மீது தவறு? என்ற விவாதமெல்லாம் இன்னும் நடந்தபடியே உள்ளது..

எனக்கு தெரிந்த நபர் ஒருவர், கண்திருஷ்டி, ஏவல், போன்ற விவகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்.. அவர் என்னிடம் பேசும்போது விஜய்க்கு பயங்கரமான கண் திருஷ்டி பட்டுவிட்டது என்கிறார். அப்படி பார்த்தால் எல்லா பிரபலங்களுக்கும்தான் கண்திருஷ்டி இருக்கும்.
2 ஆண்டுகளில் 2 மாநாடு
தவெக ஆரம்பித்து 2 வருடங்களில் 2 மாநாடு நடத்திவிட்டார் விஜய்.. செயற்குழு, பொதுக்குழு, பனையூரில் கொடியேற்றம், பரந்தூர் விமான நிலையத்துக்கு வந்தபோதும் கூட்டம், ஒரு நூல் வெளியீட்டு விழாவில் 15 நிமிடத்தில் அவ்வளவு பெரிய பேச்சு, இந்தியாவிலேயே முதல்முறையாக ஆப் மூலமாக கட்சி உறுப்பினராகுங்கள் என்று விஜய் அறிவித்ததுமே, 1 கோடி பேர் இணைந்தது, என இவை அத்தனையும் சேர்ந்து விஜய்க்கு ஒரு பெரிய மாஸ் உருவாயிற்று..
அப்படியானால் எங்கே தவறு நடந்தது? சரியான திட்டமிடல் இல்லையா? அதிகப்படியான முன்னேற்பாடுகள் இல்லையா? விஜய்க்கு வழிகாட்டுதல்கள் இல்லையோ? சுற்றுப்பயணத்தை விஜய் தவிர்த்திருக்கலாமோ? என்றெல்லாம் இப்போது கேட்கிறார்கள்.. ஆனால், விஜய்யே எதிர்பார்க்காத கூட்டம்தான் அன்றைய தினம் வந்தது.
விஜய் கரூர் சம்பவம்
மதியம் 3 மணிக்கு விஜய் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் எதுக்காக பில்லர் லைட்டுகள், டியூப் லைட்டுகளை ஏராளமாக தவெகவினர் கட்டி வைத்திருந்தார்கள்? அப்படியானால் விஜய் தாமதமாக வரப்போகிறார் என்று முன்கூட்டியே முடிவு தவெக முடிவு செய்துவிட்டதா? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.
விஜய்க்கு இது முதல் அனுபவமாகும்.. மிகவும் பதட்டமாகிவிட்டதால், உடனே கரூரிலிருந்து கிளம்பி வந்துவிட்டார்.. ஆனால், அதுவரை விஜய்யை சுற்றியிருந்தவர்கள் எல்லாருமே பிச்சிக்கிட்டு ஓடிவிட்டார்கள்.. அவர்கள் எல்லாரும் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
இப்போது விஜய் என்ன மனநிலையில் இருக்கிறார்? என்பது அவரது நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.. "இவர்களை நம்பி எப்படி கட்சி ஆரம்பித்தோம்?" என்ற மனநிலையில் கடந்த 10 நாட்களாகவே விஜய் உள்ளாராம்.. அவர்களை எல்லாம் அதீதமாக நம்பியிருந்த நிலையில், தற்போதுதான் தெளிவடைந்து உள்ளாராம்.
ஜெகதீஷ், ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்க
அதேபோல, கரூரில் வேனிலிருந்து கூப்பிட்டு, ஜெகதீஷ் ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்க என்று விஜய் சொன்னார்.. அப்போதிருந்தே யார் அந்த ஜெகதீஷ் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள்..
ஜெகதீஷ் என்பவர் ரூட்டு என்ற சினிமா நிறுவனம் வைத்திருக்கிறார்.. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிடம், சோஷியல் மீடியாவை கையாளக்கூடிய அட்மினாக வந்தவர் இந்த ஜெகதீஷ்.. அந்த நேரத்தில் "தலைவா" படத்தின் பட வேலைகள் நடந்தபோது, ஜிவி பிரகாஷின் ஸ்டுடியோவுக்கு சென்று வந்துள்ளார் விஜய்..
சோஷியல் மீடியா ஹேண்டிலிங்
அப்போதுதான், ஜிவி பிரகாஷிடம், தன்னுடைய சோஷியல் மீடியாவை ஹேண்டில் செய்வதற்கும், ஜெகதீஷ் போல ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று விஜய் சொல்ல, அதற்கு ஜிவி பிரகாஷ், இவரையே உங்களுடன் வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
கோவையை சேர்ந்தவர் ஜெகதீஷ்.. பரியேறும் பெருமாள் படத்தில் நடித்திருந்த கதிர் என்ற ஹீரோ இவரது உறவினர்தான்.. தற்போது ஜெகதீஷூக்கு தவெகவில் முக்கிய பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும் ஜெகதீஷ்தான் மேனேஜராக உள்ளார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications