Kalyana Veedu Serial: அப்பாடா ஒரு வழியாக கல்யாண வீடு சீரியல் கல்யாணம் முடிந்தது!
சென்னை: கல்யாண வீடு சீரியலில் ஒரு வழியாக, அதுவும் நல்லபடியாக ஒரு கல்யாணம் நடந்து முடிந்து இருக்கிறது. சீரியல் ஆரம்பித்த புதிதில் கோபியின் ஒரு தங்கைக்கு கல்யாணம் நடந்தது.
அடுத்து இன்னொரு தங்கை சவீதாவின் கல்யாணம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இழுவையில் இருந்தது இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது. அதோடு, ஒரு புதுமையையும் செய்து இந்த கல்யாண எபிசோடை முடித்து வைத்திருக்கிறார் திருமுருகன்.
அடுத்து இப்போதே கோபியின் கல்யாணம், சூர்யாவின் கல்யாணம், ரோஜாவின் கல்யாணம் என்று பேச்சை ஆரம்பித்து எபிசோடை முடித்து இருக்கிறார் திருமுருகன்.
எத்தனை கஷ்டம்
கல்யாண வீடு என்று சீரியலுக்கு பெயர் வைத்து இருக்கிறாரே, என்ன ஒரு கல்யாணம் நடக்கப் போகுது அவ்வளவுதானே இதுக்கு போயி சீரியல் தலைப்பே இப்படி வைக்கணுமா என்று பார்த்தால், அடுத்தடுத்து கல்யாணத்துக்கு நிற்கும் பெண்கள்,இவர்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பதில் சிக்கல் ,அடுத்து கோபியின் கல்யாணம் என்று பலரின் கல்யாணத்தை ஒவ்வொரு முடிச்சு சிக்கலாக வைத்து சீரியல் கதையை பின்னி இருக்கிறார்கள்.
ராஜா ரோஜா
ரோஜா ராஜாவை காதலிக்க, ராஜா பெண் பார்க்க வந்த ரோஜாவின் அக்கா சூர்யாவை விரும்ப, அதைத் தடுக்க ரோஜா முயற்சிக்க என்று ஆரம்பத்தில் கதை இந்த திசையில் பரபரப்பாக பயணித்தது. கடைசியில் நல்லவனாக இருந்த ராஜா ரோஜாவால் வில்லனாக மாற, வில்லியாக இருந்த ரோஜா பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட, பரிதாபத்துக்கு உரிய பெண்ணாக அவளை சித்தரித்து ரோஜாவின் ஆட்டத்தை முடித்து வைத்து இருந்தார் திருமுருகன்.
முடிந்த கையோடு
கோபியின் தங்கை சவீதாவின் கல்யாணம் முடிந்த கையோடு, தன்னை காதலித்த ரோஜாவையே கல்யாணம் செய்து கொள்ளும் விருப்பத்தை தெரிவிக்க நெகிழ்ந்து போகிறார் கோபி. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு, உங்களுடைய உண்மையான குணம் இதுதான்னு புகழ்கிறார். ஆனால், ரோஜா இதற்கு சம்மதிக்க வேண்டும் .கதைப்படி அவர் கயவர்களை சீரழித்த பெண் என்பதால், மிக தைரியமாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த கதாபாத்திரம் உள்ளது.
பல சீர்திருத்தம்
கதையில் கல்யாண விஷயத்தில் பல சீர் திருத்தங்களை இயக்குநர் புகுத்த இருப்பதால்தான் கதைக்கு கல்யாண வீடு என்று பெயர் வைத்திருக்கிறார். கோபியின் கல்யாணம் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் குழந்தையுடன் நிற்கும் ஸ்வேதாவுடனா? இல்லை அவர் மனதார காதலித்த சூர்யாவுடனா என்பதிலும் கேள்வி எழுகிறது. இப்படி கதையை நன்றாக கொண்டு போகும் இயக்குநர் திருமுருகனை பாராட்டலாம்.