Kalyana Veedu Serial: மறு வீட்டு விருந்துக்கு வந்துருங்க.. எத்தனை தடவை?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் எந்த அளவுக்கு கதை இருக்கிறது.கதையில் இருக்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறதோ,அந்த லெவலுக்கு நகைச்சுவையும் இருக்கிறது.
தங்கச்சி சவீதா கல்யாணத்தை நடத்தி முடிச்சாச்சுன்னு அப்பாடான்னு நிம்மதியா இருக்க முடியலை நாயகன் கோபியால். மண்டபத்தில் நடந்த கொலைகளை கோபி செய்திருக்கலாம் என்று போலீசுக்கு ஒரு எண்ணம் வருகிறது.
கல்யாண மண்டபத்தில் கொலைகள் நடந்ததையே அனைவரிடமும் இதுவரை சொல்லாமல் இருக்கும் கோபியைத் தேடிப் போலீஸ் வீட்டுக்கு வந்துகிட்டு இருக்காங்க. அதுவும் புது மாப்பிள்ளை பிச்சைமணியுடன்.

விருந்து மறுவீடு
பெண் வீட்டில் கல்யாணத்துக்கு மறுநாள் மறு வீட்டு விருந்து வச்சு இருக்காங்களாம் .அதைப்பெண் மாப்பிள்ளையிடமும் சொல்லியாச்சு. சம்பந்தி, அந்த வீட்டு மாப்பிள்ளை பேரிடமும் சொல்லியாச்சு. இருந்தாலும் முறைப்படி கூப்பிடாமப் போகக் கூடாதுன்னு சவீதாவின் மாமியாரும் , நாத்தனாரும் பேசிக்கிறாங்க .இதை ஒட்டு கேட்டுவிட்டு சம்பந்தி வீட்டு மாப்பிள்ளை கோபி வீட்டாரிடம் சொல்லிவிட்டு, வந்துடறார்.

தெரியும் சிவகாமி
மறுவீட்டு விருந்து நம்ம வீட்டு பொண்ணு மாப்பிள்ளைக்கு வச்சுருக்கோம் வந்திருங்க சம்பந்தின்னு சொல்றாங்க.பரவால்லை சிவகாமி உனக்கு கூட முறை தெரியுதே...எங்கே கூப்பிடாமல்; விட்டுடுவியோன்னு நினைச்சேன்னு சொல்றாங்க சம்பந்தி. டெல்லியில இருந்தாலும் நம்ம பழக்க வழக்கம் மறந்து போகுமா மீனாட்சின்னு சிவகாமி சொல்றாங்க.

பெண் வீட்டு பலகாரம்
என்ன முறை தெரியும்? பெண் வீட்டு பலகாரம் பெரிய தூக்கு வாளியில் தரணும், அது தெரிஞ்சுதா உனக்கு. நாத்தனார் மூணு தடவை உன் பொண்ணுக்கு ஹாரத்தி எடுத்திருக்கா என் பொண்ணு, அவளுக்கு தட்டுல காசு போட்டீங்களா? இப்படி என்ன முறையை சரியா செய்தே? இனியாவது இதை செய்யின்னு சொல்லிட்டு, மறு வீட்டு விருந்துக்கு உன் பொண்ணு ரூமிலிருக்கா அவளையும் கூப்பிடுன்னு சொல்றாங்க.

என்னங்க அவளையுமா?
என்னங்க அவளையுமா கூப்பிடணும்...அவ எங்க வீட்டு பொண்ணாச்சேன்னு சிவகாமி சொல்ல ,இத்தனை நாளாவே உங்க வீட்டு பொண்ணு. இப்போ என் மருமக. கூப்பிட்டுத்தான் ஆகணும் சிவகாமின்னு சொல்றாங்க. சவீதாகிட்டே நம்ம வீட்டில் மறுவீட்டு விருந்து வச்சு இருக்கோம் வந்துருடீ மாப்பிள்ளையோடன்னு சொல்றாங்க. என்னம்மா நீ, நம்ம வீட்டுக்கு நீ கூப்பிட்டுத்தான் வரணுமான்னு சவீதா கேட்க, ஏய் உன் மாமியார்தாண்டி உன்னையும் கூப்பிட சொல்றாங்க. சத்தமா பேசாதே...அதுக்கும் ஏதாவது சொல்லப் போறான்னு சொல்றாங்க.

கூப்பிடட்டும் கோபியும்
ஒரு வழியா சம்பந்தி வீட்டாரின் மறுவீட்டு விருந்துக்கு சவீதா,அவளின் நாத்தனார், மாமியார் மூவரும் வந்து இருக்காங்க.அதுக்குள் கோபி தலையைக் கண்ட மீனாட்சி, மகளிடம் காதில கிசுகிசுத்துவிட்டு சவீதாவை அழைச்சுக்கிட்டு போயிடறாங்க.கோபி வந்தும் எங்கேன்னு கேட்க வீடு வரைக்கும் போயிருக்காங்கன்னு சொல்லிய நாத்தனார்.கோபி நீயும் விருந்துக்கு போயி அம்மாவை கூப்பிட்டுட்டு வந்துருன்னு சொல்றா.

மாமியார் லூசு
அதே மாதிரி வீட்டுக்கு போயி, மீனாட்சி அம்மாவையும கூப்பிட்டுட்டு, தங்கச்சியையும் ஒரு வார்த்தை கூப்பிடுன்னு அவங்க சொல்ல, சவீதாவை கூப்பிட உள்ளே போறான்.தங்கச்சி மறு வீட்டு விருந்துக்கு வந்திருன்னு சொல்ல, லூசாண்ணே நீ? என்னையே விருந்துக்கு கூப்பிடறேன்னு கேட்கறா.இல்லை உன் மாமியார்தான்னு சொல்ல, லூசா அந்த பொம்பளைன்னு கத்த, அங்கே வந்த மீனாட்சி என்னையத்தனே கோபி லூசானு உன் தங்கச்சி கேட்டான்னு கேட்கறாங்க.அது என்னைத்தாங்க சொல்லுச்சுன்னு சமாளிச்சு கோபி வர.அவனை கைது செய்ய மாப்பிள்ளை பிச்சை போலீசுடன் வர்றான்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications