Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kanmanai Serial: அது சரி... அப்ப அந்த பாலை யாருதான் குடிச்சா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யாவுக்கும், கண்ணனுக்கும் கல்யாணம் நடக்க கூடாது என்று சென்னையிலிருந்து ஒரு டாக்டரிடம் கிட்டத்தட்ட கோமாவுக்கு போவது மாதிரியான போதை மருந்து வரவழைச்சதா கிருஷ்ணவேணி சொன்னாங்க.

ஆனால், அந்த பாலை கண்ணன் குடிக்கலை. அதே கிருஷ்ணவேணி அம்மா, இந்த கல்யாணம் நடக்க கூடாது என்று கண்டிஷன் போட்ட சம்பந்தி அம்மாவுக்கு அந்த பால்தான் என்று தெரியாமல், அதை குடிக்க கொடுக்கறாங்க.

கடைசியில் சம்பந்தி அம்மாவும் ஒண்ணும் நடக்கமால் காலையில் முழிச்சுக்கறாங்க. ஆனால், இவங்க பையன் ஆகாஷ், அதுவும் வளர்மதியின் மாப்பிள்ளையைத்தான் காணோம்.

 கை மாறிய பால்

கை மாறிய பால்

கண்ணனுக்கு குமரேசன் பாலில் மருந்து கலந்து கொடுத்தான்.அந்த பாலை குடிப்பதற்குள் கண்ணனுக்கு போன். அதற்குள் அன்பு அக்கா வந்து பால் தர்றாங்க.குமரேசன் பால் குடுத்துட்டான்னு கண்ணன் சொல்ல, இருந்தாலும் நீ பாசத்தோடு குடுக்கற பாலை குடிக்கறேன்க்கான்னு சொல்லி கண்ணன் அந்த பாலை வாங்கிக்கறான்.

 மறுத்து சவுந்தர்யாவுக்கு

மறுத்து சவுந்தர்யாவுக்கு

இந்த பாலை யாருக்குக்கா கொண்டு போறேன்னு கண்ணன் கேட்க, சவுந்தர்யாவுக்குத்தான். அவளும் எதுவும் சாப்பிட கூடாதேன்னு சொல்லிட்டு போறாங்க. விஜயலட்சுமி இந்த பால் யாருக்கு கொண்டு போறேன்னு கிருஷ்ணவேணி கேட்கறாங்க.சவுந்தர்யாவுக்குத்தான்னு இவங்க சொல்ல,அவளுக்கு வேற பால் குடு. சம்பந்தி அம்மா கோவத்துல இருக்காங்க.அவங்களுக்கு இந்த பாலை தருகிறேன்னு வினை விதைச்சவங்களுக்கே அந்த பால் போகுது.

 கல்யாணத்தை நிறுத்த

கல்யாணத்தை நிறுத்த

அது சரி, கல்யாணத்தை நிறுத்த முதல் நாள் இரவுதான் பாலை குடிப்பாங்க.இவங்க என்னடான்னா கல்யாண டான்ஸ் ஆடணும்னே காலையில் இந்த பால் கொடுக்கும் வைபோகத்தை நடத்தி இருக்கிறார்கள்.கொஞ்சமும் லாஜிக் இல்லாமல்.

 கடத்திதான் செல்லப்பட்டான்

கடத்திதான் செல்லப்பட்டான்

வளர்மதியின் மாப்பிள்ளை ஆகாஷ் கூட கடத்தித்தான் செல்லப்பட்டான். அப்படியானால் அளந்த பாலை குடித்தது யார்? இரவில் பால் குடித்தால்தானே எழுந்திரிக்காமல் கோமாவுக்கு போன மாதிரி படுத்து கிடப்பார்கள் என்று கிருஷ்ணவேணி தனது சம்பந்தியிடம் சொன்னார். பின்னே இப்படி கதையை கொண்டு போகிறீர்கள்?. பார்க்கும் மக்கள் முட்டாள்களா?.

காலையில் கண்ணனுக்கு பால் தர வேண்டியதன் அவசியமென்ன? கல்யாணம் எப்படி நிற்கும்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+