கார்த்திகை தீபம்: காலை வாரிய ரூபஸ்ரீ.. சிதம்பரத்திற்கு சவால் விட்ட கார்த்திக்.. எதிர்பாராத திருப்பங்கள்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் டிசம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நேற்றைய எபிசோடில் பாட வந்தது பல்லவியே இல்லை என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து கார்த்திக் ரூபஸ்ரீ இடம் கோபமாக சண்டை இடுகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் பாட வந்தது பல்லவி இல்லை என்ற விஷயம் கார்த்திக்கு தெரிய வந்திருக்கிறது. அதை தொடர்ந்து இன்று தன்னை அனுப்பி வைத்தது ரூபஸ்ரீ தான் என்பதை பற்றி பல்லவி ஆக நடிக்க வந்த பெண் போட்டுக் கொடுக்க, அதனால் கோபமாக கார்த்திக் ரூபஸ்ரீ வீட்டிற்கு கிளம்பி போகிறார். அங்கு ரூபஸ்ரீ ஹாய் ஆக டிவி பார்த்துக் கொண்டே அவருடைய பாட்டியோடு பேசிக் கொண்டிருக்கிறார்.
இருவரும் பல்லவியாக நடிக்கப் போகும் அந்த பெண் சரியாக செய்து விடுவாரா? என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் கார்த்திக்கும் தீபாவும் வீட்டிற்குள் வர உண்மை தெரிந்து விட்டு தான் கார்த்திக் வீட்டுக்கு வருகிறாரா என்று இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது பாட்டி அங்கிருந்து நைசாக கழண்டு போய்விடலாம் என்று முயற்சி செய்ய அதற்கு ரூபஸ்ரீ பாட்டியை பிடித்து வைத்துக் கொள்கிறார்.

அப்போது கார்த்திக் ரூபஸ்ரீ இடம் என்னுடைய கேரியர் இருக்கு இதுல, உங்களால எப்படி பொய் சொல்ல முடிந்தது என்று சத்தம் போட்டு கொண்டு உங்களை நான் போலீசில் பிடித்துக் கொடுக்கவா? நீங்க ஆள் மாறாட்டம் பண்ணியிருக்கீங்க என்று மிரட்டுகிறார். ஆனாலும் ரூபஸ்ரீ பல்லவி தீபா தான் என்ற ரகசியம் கார்த்திக்கு தெரியவில்லை என்பதை தெரிந்து கொண்டு திமிராக பேசிக் கொண்டிருக்கிறார்.

அதனால் கோபத்தில் கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறார். அடுத்து என்ன செய்வது? யாரை எப்படி பாட வைப்பது என்று யோசனையில் இருக்கும் கார்த்திக்குக்கு சிதம்பரம் போன் செய்து பல்லவி விஷயம் என்னாச்சு என்று கேட்க அதற்கு கார்த்திக் இதெல்லாம் உங்க வேலை தானா நிச்சயம் நாம் பல்லவியை தேடி கண்டுபிடித்து உங்ககிட்ட சொன்ன மாதிரி இருபதாம் தேதிக்குள்ள பல்லவி பாடுவா என்று சவால் விட்டு போனை வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த கார்த்திக் அபிராமி உட்பட எல்லாரிடமும் வந்தது பல்லவியே இல்லை என்ற உண்மையை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு அபிராமி நல்லா தானே பாடுனா என்று எல்லோரும் கேட்க அதற்கு பல்லவிகிட்ட ஒரு தயக்கம் இருக்கும் அந்த தயக்கம் அபிராமி கிட்ட இருந்தது.

அதனால் தான் நம்பி ஏமாந்துட்டேன். தப்பு என் மேல தான் இருக்கு என்று கார்த்திக் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக எபிசோடு முடிவடையும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications