Kayal Amutha: என்னாது நான் தற்கொலைக்கு முயன்றேனா! எல்லாமே Fake! கயல் சீரியல் நடிகை அமுதா மறுப்பு!
சென்னை: கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனமுடைந்த பிரபல சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம் என நடிகை அமுதா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த தகவல்கள் எல்லாம் போலியானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசித்து வந்தவர் சின்னத்திரை நடிகை அமுதா (28). இவரது கணவர் பிரபு (30), ஐடி ஊழியராவார். இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் அமுதா கயல் சீரியலில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர் ஷூட்டிங் சென்றுவிட்டு இரவு வீடு திரும்ப நீண்ட நேரமாகுமாம். இது பிரபுவுக்கு பிடிக்கவில்லை. இதனால் சீரியல்களில் நடிப்பதை நிறுத்தும்படி பிரபு கூறியதற்கு அமுதா உடன்படவில்லை என தெரிகிறது.
இதனால் அவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாம். இதனால் அமுதாவை பிரிந்த பிரபு, ஆவடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அமுதா மனமுடைந்ததாக தெரிகிறது.
கணவருடன் சமாதானம் பேச பல முறை முயன்றும் அவர் பேச மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பினாயிலை எடுத்து குடித்து அமுதா தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீஸார் அவரிடம் விசாரித்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான் அமுதா இதையெல்லாம் மறுத்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இப்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது என் கணவருக்கும் எனக்கும் பிரச்சினையால் நான் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வீடியோவில் உள்ளது.
இதை யாரும் நம்பாதீர்கள். அது ஒரு போலியான வீடியோ. நான் எனது சொந்த ஊரில் இருக்கிறேன். எதற்காக இப்படி ஒரு வீடியோவை பதிவு செய்தார்கள் என எனக்கு தெரியவில்லை. அந்த வீடியோ பதிவு போலியானது என அனைவருமே ரிப்போர்ட் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications