Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெரு நாய் எல்லாம் பாவம் இல்ல! பிரச்சனை நமக்கு நடக்கும் போது தான் தெரியும்! கீர்த்தி சுரேஷ் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரு நாய்கள் குறித்து தான் பகிர்ந்த கருத்துகளால் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர், சமூகத்தில் எழும் இந்த விவாதத்தை இரண்டு பக்கங்களிலிருந்தும் பார்க்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் தெரு நாய் விவகாரம் பெரிய அளவில் பூதாகரமாகி கொண்டு இருக்கிறது. தெருவில் நிம்மதியாக யாராலும் நடக்க முடியாத அளவிற்கு தெருநாய் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தெரு நாய் கடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரேபிஸ் நோயால் காலமாகி கொண்டு இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் மக்கள் தெருநாயை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இப்போது நீதிமன்றம் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் தெருநாயை கட்டுப்படுத்த வேண்டும் அங்கிருந்து தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆணை வெளியிட்டு இருக்கிறது.

Keerthy Suresh Bigg Boss vijay tv

கீர்த்தி சுரேஷ் கருத்து

இந்த நிலையில் இது பற்றி கீர்த்தி சுரேஷ் பேசும்போது தெரு நாய்களுக்கு எதிரான தீர்ப்பை பார்த்து ரொம்ப கஷ்டமா இருப்பதாக குறிப்பிட்ட கீர்த்தி சுரேஷ், அதன் மறுப்பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.

"என்னோட டிரைவரோட சின்ன பசங்க ரோட்டில் போகும் போது ரெண்டு தடவை தெரு நாய் கடிச்சிருக்கு. தெருநாய் எல்லாம் பாவம்னு சொல்லுறோம். ஆனா, நமக்குத் தெரிந்தவர்களுக்கு நடந்தாத்தான் புரியுது" என்று அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். நாயின் எச்சிலோ, ஒரு நகமோ பட்டால் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் அதனுடைய பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாது - அதையும் நாம பார்க்கணும்" என்று தனது கருத்தைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் பிரமோஷன்

இத்தகைய சமூகப் பொறுப்புள்ள கருத்தை பகிர்ந்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், தான் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் பிரமோஷனுக்காக பிக் பாஸ் சீசன் 9 வீட்டுக்குள் சென்றுள்ளார்.

இரவில் திடீரென 'எண்ட்ரி' கொடுத்த கீர்த்தி சுரேஷ்க்கு, பிக் பாஸ் போட்டியாளர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்த வாரம் 'ஸ்கூல் டாஸ்க்' நடைபெறுவதால் போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் இருந்துள்ளனர்.

போட்டியாளர்களுடன் ஜாலியாக பேசிய கீர்த்தி சுரேஷ், அவர்களுக்கு வெளியில் நிறைய ரசிகர்கள் இருப்பதாகக் கூறினார். மேலும், நவம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள தனது 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இறுதியில் அவர்களுடன் டான்ஸ் ஆடிவிட்டு வெளியே வந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+