“இது அரசு விருதா… இல்ல பேமிலி விருதா?”.. தமிழக அரசு விருது பட்டியல் குறித்து நடிகை லட்சுமி கொந்தளிப்பு
சென்னை: தமிழக அரசு நேற்று அறிவித்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் பட்டியல், ஒருபுறம் பலருக்கு மகிழ்ச்சியையும், மறுபுறம் சிலருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், சின்னத்திரை நடிகை ஊர் வம்பு லட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வீடியோவில் பேசும் லட்சுமி, தமிழக அரசு 2014 முதல் 2022 வரை சின்னத்திரை நடிகர்களுக்கான விருதுகளை அறிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
"விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால், அந்த பட்டியலில் என் பெயர் இல்லை. அதற்கான காரணம் என்ன என்பது எனக்கே தெரியவில்லை" என்று அவர் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

செம்பருத்தி சீரியல்
தான் நடித்த 'செம்பருத்தி' சீரியல் குறித்து பேசும் லட்சுமி, "அந்த சீரியலில் நான் நடித்த கதாபாத்திரம் நெகட்டிவ் என்றாலும், அது அதிகமாக பேசப்பட்டது. அந்த கேரக்டருக்காக நான் நிறைய கஷ்டப்பட்டேன். டப்பிங்கையும் என் சொந்த குரலிலேயே செய்தேன். ஒரு நடிகையாக முழுமையாக உழைத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
இவ்வளவு உழைப்புக்குப் பிறகும், தனது நடிப்புக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காதது மனதை வலிக்கச் செய்ததாக அவர் கூறுகிறார். இந்த விருதுகள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன? யார் தேர்வு செய்கிறார்கள்? அந்த தேர்வு முறையே என்ன?" என்பது கேள்வியாக இருப்பதாகவும் பேசி இருக்கிறார்.
"இது உண்மையில் தமிழ்நாடு அரசு விருது என்றால், திறமையானவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் பல சமயங்களில், குடும்பத்தினர், நெருங்கியவர்கள், சொந்தக்காரங்களுக்கு மட்டுமே விருதுகளை பெறுகிறார்கள் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது" என அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தனது பேச்சில் மேலும் கடுமையாக பேசும் லட்சுமி, "விருதுகளை தேர்வு செய்பவர்கள் அவர்களுக்கு சாதகமானவர்களுக்கு மட்டும் விருது வழங்குகிறார்கள் என்றால், அதை தமிழ்நாடு அரசு விருது என்று சொல்ல வேண்டாம். அது உங்கள் பேமிலி விருது என்று சொல்லிக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், "என் கேள்வியை நான் தான் கேட்க வேண்டும் என்பதால் தான் இப்படி பேசுகிறேன். நான் பேசுவது சரியா, தவறா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் என் வருத்தத்தை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.
ஆதரவு குரல்கள்
லட்சுமியின் இந்த வீடியோக்கு பலரும் சமூக வலைதளங்களில் ஆறுதல் மற்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். "நீங்கள் உழைத்திருக்கிறீர்கள்", "உங்கள் நடிப்பு மறக்க முடியாதது", "விருது இல்லாதாலும் ரசிகர்களின் அன்பே பெரிய விருது"என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பே, திரைப்பட துறையிலும் தமிழக அரசு விருது பட்டியல் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். விருது தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் அப்போதும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு விருதுகள் என்பது கலைஞர்களின் பல வருட உழைப்புக்கு கிடைக்கும் மிக உயரிய அங்கீகாரம். ஆனால் அந்த விருதுகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுவது, "தேர்வு முறை சரியானதா?", "உண்மையில் திறமைக்கே மதிப்பு தரப்படுகிறதா?"என்ற விவாதங்களை தீவிரமாக்கியுள்ளது.
லட்சுமியின் இந்த ஆதங்கக் குரல், சின்னத்திரை கலைஞர்களின் மனதில் இருக்கும் பல கேள்விகளின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு அரசு தரப்பில் விளக்கம் வரும் என்கிற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications