Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நீயெல்லாம் ஏன்யா சபரிமலை போற?” பயில்வான் ரங்கநாதனை அப்பவே திட்டிய நம்பியார்! பிறகு நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் வெகு நாட்களாக ஐயப்பனுக்கு மாலை அணிந்து தொடர்ந்து சபரிமலைக்குப் போய் குருசாமி என்று அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் எம்.என்.நம்பியார். அவரிடம் முதன்முதலில் சபரிமலைக்கு போகப்போறேன் என்று சொன்னபோது நடிகரும், ஊடகவியலாளருமான பயில்வான் ரங்கநாதனை நகைச்சுவையாகத் திட்டிய சம்பவத்தை ஓர் பேட்டியில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.

Pailwan Ranganathan Nambiar

டென்ஷனான நம்பியார்

பயில்வான் ரங்கநாதன் சொன்ன சுவாரஸ்யமான நிகழ்வு இங்கே உள்ளது: "ஒரு நாள் காலையில் குளிச்சு முடிச்சு விபூதி, குங்குமம், சந்தனம் எல்லாம் வச்சுக்கிட்டு நம்பியாரை சந்திச்சு நான் ஐயப்பன் மலைக்கு போறேன் சார்னு சொன்னேன். அவர் என்னை பார்த்து யோவ் என்னப்பா இது கோலம்?னு கேட்டார்".

"நான் ஐயப்பன் மலைக்கு போறேன்னு சொன்னதும் உடனே கோபமான நம்பியார், 'உன்னை யாரு ஐயப்பன் மலைக்கு போகச் சொன்னது? நீங்களாம் போறதாலதான் ஐயப்பன் சபரிமலையை விட்டே ஓடிப் போறான்' னு சொன்னார் என்று பயில்வான் காமெடியாக சொன்னார்.

நம்பியார் அப்படி சொல்ல காரணம்

சினிமாத் துறையினர் சபரிமலை விரதத்தை சரியாகக் கடைப்பிடிப்பது கடினம் என்பதால்தான் நம்பியார் அப்படிச் சொன்னார்னு பயில்வான் விளக்கினார். பொதுவா சினிமாக்காரர்கள் ஐயப்பன் மாலை போட்டால் சரியான விரதம் இருக்க முடியாது. ஏன்னா, படப்பிடிப்பு காலை 9 மணிக்கு ஆரம்பிச்சு மாலை 6 மணிக்கு மேல வரைக்கும் நீளும். மாலைல குளிச்சுட்டு கோயிலுக்கு போயிட்டுத் தான் சாப்பிடணும்ங்கிற நடைமுறைகள் சினிமாத் துறையில் கடினம். அதேபோல் படப்பிடிப்புல சிகரெட் பிடிப்பது மாதிரி காட்சிகள் எல்லாம் இருக்கும் என்பதால்தான் நம்பியார் சாமி அப்படிச் சொன்னாராம்.

பயில்வானின் முதல் சபரிமலை பயணம்

ஆனால், பயில்வான் ரங்கநாதன் தன்னை வித்தியாசமான முறையில்தான் சபரிமலைக்கு தொடங்கினார் என்று சொன்னார். அசைவம் சாப்பிடாத வெங்கட்ராம ஐயர் என்பவர்தான் பயில்வானுக்கு முதல்முதலில் மாலை அணிவித்தாராம். அவர் பயில்வானிடம் 3 நாட்கள் மட்டுமே விரதம் இருக்கச் சொன்னாராம்.

நான் எப்படி அது சாத்தியம், 48 நாட்கள் இருக்க வேண்டும்னு சொல்வார்களேனு கேட்டதுக்கு, யார் சொன்னா உன்னிடம் 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்னு திரும்பக் கேட்டார். ஐயப்பனை மனதில் நினைத்துக்கொள், அதுதான் எல்லாத்துக்கும் காரணம் என்று அவர் சொன்னார் என பயில்வான் ரங்கநாதன் சொல்லி இருக்கிறார். அப்படியாக 3 நாட்கள் விரதமிருந்து தான் பயில்வான் முதன்முதலில் ஐயப்பன் கோயிலுக்கு சென்றாராம்.

குருசாமியின் வாழ்க்கை

மனச்சேரி நாராயணன் நம்பியார் என்ற எம்.என்.நம்பியார் 1919-ல் பிறந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்கள்ல நடிச்சு பெயர் வாங்கியவர். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உட்படப் பலர் படங்கள்ல இவருக்குப் பெரும்பாலான கேரக்டர் இருந்தன.

சபரிமலை பக்தர்கள் மத்தியில் குருசாமி என்று அழைக்கப்படுற நம்பியார், 1942-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக சபரிமலைக்குச் சென்றிருக்கிறார். அவர் ஐயப்பனுக்காகவே வாழ்ந்த மகான் என அழைக்கப்படுகிறார். பக்திப் பாடகர் வீரமணி ராஜூ போன்றோர் உட்படப் பலரும் அவருடன் சேர்ந்து சபரிமலைக்கு சென்றிருக்கிறார்கள். இவருடைய பக்தி வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் எதிரும் புதிருமா இருந்ததால்தான், சினிமாக்காரர்கள் சபரிமலைக்குப் போறது பத்தி நம்பியார் கேலி செய்திருக்கிறார்னு சொல்லப்படுது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+