மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து
சென்னை: கடந்த சில மாதங்களாக பரபரப்பை கிளப்பிய மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம், தற்போது ஒரு முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளது. நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு, மறுப்பு, நீதிமன்றம் என சென்ற இந்த பிரச்சனைக்கு, டிஎன்ஏ பரிசோதனை முடிவு ஒரு பெரிய பதிலை கொடுத்திருக்கிறது.

செஃப் மாதம்பட்டி ரங்கராஜன்
குறுகிய காலத்திலேயே புகழின் உச்சியை அடைந்த மாதம்பட்டி ரங்கராஜன் சோசியல் மீடியா மூலம் பலருக்கும் பரிச்சயமாக மாறியிருந்தார். அதுபோல மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலமாகவும் கதாநாயகனாக பிரபலம் அடைந்திருந்தார். அந்த நேரத்தில் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட சில மாதங்களிலேயே இவரைப் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது
மாதம்பட்டி ரங்கராஜன் போட்ட சவால்
அதாவது மாதம்பட்டி ரங்கராஜனுக்கு ஸ்ருதி என்ற மனைவி இருக்கும் நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக போஸ்ட் போட அது பெரிதாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் ஜாய் கர்ப்பமாக இருந்ததாகவும் அறிவித்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு, ஜாயிடம் இருந்து ரங்கராஜ் விலக ஆரம்பித்தது இந்த பிரச்சனையின் தொடக்கமாக மாறியது. இதனால் மனஉளைச்சலுக்குள்ளான ஜாய், நேரடியாக பொதுவெளிக்கு வந்து நியாயம் கேட்டார்.
மாதம்பட்டி ரங்கராஜன் போஸ்ட்
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றபோது, "குழந்தை என்னுடையது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்தால், நான் பொறுப்பேற்க தயார்" என்று ரங்கராஜ் தெரிவித்திருந்தார். அதன் பிறகு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனை தான் இப்போது எல்லாவற்றுக்கும் முடிவு கட்டியிருக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த பரிசோதனை முடிவில், ஜாய்க்கு பிறந்த குழந்தையின் தந்தை ரங்கராஜ் தான் என்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாய் கிரிஸில்டா பதிவு
இந்த தகவல் வெளிவந்த உடனே, ஜாய் கிரிஸில்டா உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். "என் மனம் நன்றியால் நிரம்பி வழிகிறது... என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றி சொந்தம்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, "நான் இன்று நிற்கும் இடம் ஒரு தாய் போராட்டத்தின் சாட்சி" என்ற அவரது புதிய பதிவு, இந்த விவகாரத்தை இன்னும் உணர்வுபூர்வமாக மாற்றியுள்ளது.
ஒரு பெண்ணாக, குறிப்பாக ஒரு தாயாக, தன் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் சந்தித்த மனஅழுத்தம், அவமானம், சந்தேகங்கள்-இவற்றையெல்லாம் தைரியமாக எதிர்கொண்டு நிற்கும் ஜாயின் போராட்டம் பலரையும் நெகிழச்செய்துள்ளது.
"ஒரு பெண்ணின் கண்ணியத்தையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கு, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கே தந்தை இல்லை என்று சொல்லப்படும் நிலையில் கூட தைரியமாக நின்று உண்மையை நிரூபித்திருக்கிறார்" என்று சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
குவியும் கமெண்ட்ஸ்
இப்போது ஜாய் பகிர்ந்துள்ள பதிவுகள் வெறும் சந்தோஷத்தை மட்டும் காட்டவில்லை; அது ஒரு தாயின் வெற்றி, அவர் சந்தித்த போராட்டத்தின் முடிவு, மற்றும் தன்னம்பிக்கையின் சாட்சி என்ற அளவுக்கு பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், இந்த விவகாரம் ஒரு சாதாரண சர்ச்சையை தாண்டி, ஒரு பெண்ணின் உரிமை, மரியாதை, மற்றும் உண்மைக்கான போராட்டம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications