மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமண போட்டோ, ஜாய் கிரிஸ்டினாவுக்கு வந்த பிரச்சனை! அவரே வெளியிட்ட பதிவு
சென்னை: நடிகர் மற்றும் சமையல் கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த நிலையில், ஜாய் தனது மொபைல் எண் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக ஒரு அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துள்ளார். திருமண அறிவிப்பிற்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்திருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டாவின் உறவு
'கோடி அருவி கொட்டுதே..' பாடல் இடம்பெற்றிருந்த 'மெகந்தி சர்கஸ்' திரைப்படத்தின் கதாநாயகனாக மாதம்பட்டி ரங்கராஜ் நடித்தார். தற்போது அவர் விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் 5-வது சீசனில் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டாவுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாகக் கிசுகிசுக்கப்பட்டது. இந்த வதந்திகளை உறுதிப்படுத்தும் விதமாக, ஜாய் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் தனக்குக் குங்குமம் வைப்பது போலவும், மாலையும் கழுத்துமாகப் போஸ் கொடுப்பது போலவும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "Mr & Mrs. Madhampatty Rangaraj" என்று குறிப்பிட்டு, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
சர்ச்சையும், போன் ஹேக்கிங்கும்
ஜாய் கிரிஸில்டாவின் இந்த அறிவிப்பு, மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் முதல் திருமணம் குறித்தும், ஜாய் கர்ப்பமாக இருக்கும் செய்தி குறித்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமணமாகும் முன்பே ஜாய் கர்ப்பமாகிவிட்டதாகப் பலர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், ஜாய், தங்கள் உறவு சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், ஜாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், தனது போன் நம்பர் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், அந்த எண்ணிலிருந்து வரும் எந்தவொரு அழைப்பு அல்லது குறுஞ்செய்திக்கும் பதிலளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். "யாரிடம் எல்லாம் எனது நம்பர் இருக்கிறதோ, அவர்கள் அந்த நம்பரை டெலிட் செய்து விடுங்கள்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி
மாதம்பட்டி ரங்கராஜ், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் கூறும் சமையல் நுட்பங்களும், அவரது தனிப்பட்ட ஸ்டைலும் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. இந்தச் சர்ச்சைகளுக்கு நடுவில், அவர் இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications