Magarasi Serial: மகராசி சீரியல் கெத்து மனோகராக விஜய் ஆனந்த்!
சென்னை: சன் டிவியின் மதிய நேர புதிய சீரியலாக மகராசி சீரியல் நேற்று திங்கள் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சன் டிவியின் பிரியமானவள் சீரியலில் உமா அம்மாவாக நடித்த நடிகை நடித்து இருக்கார்.
நாயகன், நாயகி தமிழுக்கு புதிது என்றாலும் நடன இயக்குநர் ராம்ஜி, விஜய் ஆனந்த், நடிகரும் இயக்குநருமான மனோபாலா என்று பலரும் நடித்து இருக்கிறார்கள்.
நடிகரும், முன்பு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்த விஜய் ஆனந்த் இந்த தொடரில் தனது கதாபாத்திரம் குறித்து பகிர்ந்துகொண்டு இருக்கார்.

விஜய் ஆனந்த் கெத்து
ரொம்ப காலமாச்சு சீரியல்களில் நடித்து.வாழ்ந்து காட்டுகிறேன் என்று சன் டிவி சீரியலில் ராம்ஜியுடன் நடிச்சு இருக்கேன்.அப்புறம் திருமதி செல்வம் சீரியலில் கொடுமைக்கார வில்லனாக நடிச்சேன். மகராசி சீரியலில் என்னோட கேரக்டர் பேரே கெத்து மனோகர்தான்.

கெத்து ரொம்ப
சீரியலில் ரொம்ப கெத்து காட்டுவேன்.பேசறது எல்லாம் கோடிக் கணக்கில் புரளுவது போல பேசுவேன் .அவங்க அசந்து வாய் பிளந்து நிற்கும்போது..போறப்போ போனுக்கு ரீசார்ஜ் பண்ணிட்டு போங்கன்னு சொல்லுவேன். இதுக்கு பாடி லாங்குவேஜ் டைரக்டர்தான் கத்துக் கொடுத்தார்.

தமிழ் நடிகர் நடிகை
என்னடா இப்போவெல்லாம் தமிழ் பேசுற நடிகர் நடிகைகளை பார்க்க முடியறதில்லையேன்னு கவலை இருக்கும், இந்த சீரியலில் நடிக்கறவங்க ஒரு சிலர் தவிர மத்தவங்க நல்ல தமிழ் பேசறவங்கதான்.அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கெட்டியா பிடிச்சு
எனக்கு கொடுத்து இருக்கும் கெத்து மனோகர் கதாபாத்திரத்தை கெட்டியா பிடிச்சுக்கிட்டு, ரொம்ப கெத்தா டைரக்டர் சொல்ற பாடி லாங்குவேஜ்ல நல்லா நடிக்கணும். நிச்சயமா இந்த சீரியல் உங்களுக்கு பிடிக்கும், மறக்காம பாருங்க என்று கூறியுள்ளார் விஜய் ஆனந்த்












Click it and Unblock the Notifications