Maharasi Serial: ஹரித்வார் கங்கை நதியின் சிவன் கோயில்.... வாவ்.. ஓம் நம சிவாய!
சென்னை: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிவன் கோயில்கள், பிள்ளையார் கோயில்கள், அனுமன் கோயில்கள் கிருஷ்ணன் கோயில்கள் என்று ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது போன்ற கான்செப்ட் உண்டு.
ஆனால், ஒவ்வொரு தலங்களுக்கும் தனித் தனி வரலாறுதான். ஒவ்வொரு தலங்களும் வித்தியாசமாக மக்களின் மனதை பக்தியால் கொள்ளை அடிப்பதாக இருக்கும்.
உத்திரகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் கங்கை நதியின் நடுவில் பிரமாண்டமான சிவன் சிலை மனதை தீராத பக்தியால் அலைக்கழிக்கும்.
செல்லம்மாள் மண்பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப!
சன் டிவி சீரியலில்
சன் டிவியில் மகராசி என்று ஒரு புதிய சீரியல் இன்று முதல் மதியம் 2:30 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகிறது. இன்றுதான் முதல் எபிசோட். கதையின் நாயகியை உத்திரகண்டில் ரவுடிகள் துரத்துகிறார்கள். அவள் ஓடி ஓடி கங்கை நதியின் நடுவில் இருக்கும் பிரமாண்ட சிவனின் காலடியில் விழுந்து எழுந்து ஓடுகிறாள்.
அனுமன் கோயில்
அடுத்து அங்கு இருக்கும் பிரமாண்ட பக்தி மயமான அனுமன் கோயில் பக்கமாக ஓடி ஒளிகிறாள். இருந்தும் ரவுடிகள் துரத்த ஓடுகிறாள், உத்திரகண்ட் ரயில் பாலம் கடந்து ஓடும்போது ஒருவன் தாங்கிப் பிடிக்கிறான். அடுத்த நிமிஷம் கையில் குழந்தையுடன் இருக்கும் அவனோடு ரயிலில் இருக்கிறாள் நாயகி.
இல்லை டிக்கெட் .
சென்னை போகணும்னு கேட்டாலும் டிக்கெட் மட்டும் இருவரிடமும் இல்லை.அவன் இருவருக்கும் சேர்த்து அபாரதத்துடன் டிக்கெட் வாங்கிவிட்டான். நட்ட நடு இரவில் பிள்ளையுடன் ரயிலிலிருந்து குதிக்கப் போக, அவள் இவர்களைக் காணோம் என்று தேடி வந்தவள் காப்பாற்றி விடுகிறாள்.
அழகிய அம்மா
இவன் தனது குடும்பம் பற்றி கூறுகிறான். பிரியமானவள் அழகிய அம்மாவில் இருந்து குடும்பத்தின் காட்சி ஆரம்பமாகிறது. உத்திரகண்ட் மாநிலம்.. சிவன் கோயில் இனியும் ஃபிளாஷ் பேக்கில் வருமா என்கிற ஏக்கம் முதல் எபிசோடில் ஆரம்பித்து இருக்கிறது.