Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Metti Oli Serial: இப்படி பேசி கதி கலங்க அடிக்கறானே இந்த மாணிக்கம்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் மெட்டி ஒலி சீரியல் மறு ஒளிபரப்பாகி வருது. ஏற்கனவே பெண் பிள்ளைகளுக்கு அப்பா பாசம் ஜாஸ்தி. இந்த நிலையில், ஐந்து பெண்களை ஒற்றை ஆளாக வளர்த்து ஆளாக்கி இருக்கும் அப்பா என்றால் பெண்களுக்கு தனி பாசம்தானே இருக்கும்

அப்படித்தான் மெட்டி ஒலி சீரியலில் அப்பா மீது... பிறந்த .வீட்டு மனுஷர்கள் மீது கொள்ளை பிரியமாக இருக்கிறாள் சரோஜா என்கிற சரோ. அப்பாவுக்கு முதன் முறை ஹார்ட் அட்டாக் வந்து இருக்கு. போக கூடாதுன்னு அம்மாவுடன் சேர்த்துக்கொண்டு மாணிக்கமும் பேசுகிறான்.

சரோவின் மாமா மூலம் காரியம் ஆக வேண்டும்.. அவர் தரும் பணம் வேண்டும் என்று நிலை வருகையில், அம்மா சரோகூட அன்பா நடந்துக்கோடா என்று சொன்னால் அது படி நடந்துக்கறான். இப்படி கலங்க அடிக்கிறானே மாணிக்கம் என்று பார்ப்பவர்களுக்கு கோபம்தான் வருகிறது.

தேவராஜ் மாமா

தேவராஜ் மாமா

சரோவின் மாமா தேவராஜ் மூலம் கடையை விலைக்கு வாங்க வேண்டும் என்று சரோவிடம் நைசாக பேசி தாஜா செய்கிறான். அவளும் மாமாவிடம் பேசி முதலில் மாணிக்கத்துக்கு வேலை வாங்கிக் கொடுத்தாள், அடுத்து, மாமாவிடம் கொஞ்சம் பணம் வாங்கி கடையையும் வாங்கித் தர மாமாவிடம் பேசுகிறாள்.

அம்மா பேச்சு

அம்மா பேச்சு

மாணிக்கத்தின் அம்மா எப்போதும் மருமகள் சரோவிடம் வெடுக் வெடுக் என்று பேசும் மாமியாராகவே இருக்கிறார். அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு.. அதனால் அப்பாவை பார்க்க போகணுமென்றால், இப்போ என்ன அவசரம்.. அப்புறம் போயிக்கலாம் என்று முட்டுக்கு கட்டை போட்டு விடுகிறார். இதனால் பாசம் மிகு பெண்ணாகத் துடித்துப் போகிறாள் சரோ.

கடையை முடிக்க

கடையை முடிக்க

தேவராஜ் மாமா கடையை பேசி முடித்து, கை எழுத்து போட வேண்டும் என்றால், இது சரோவின் அப்பா முன்னிலையில்தான் நடக்க வேண்டும். அவர் ராசியானவர் என்று சொல்லி, உன் மாமனாரை அழைச்சுட்டு வந்துரு மாணிக்கம் என்று சொல்ல, அப்போது வந்து உன் அப்பாவை பார்த்துட்டு வரலாம் வா சரோன்னு கூப்பிடுகிறான்.

இல்லைங்க வரலை

இல்லைங்க வரலை

என்னங்க சொல்றீங்க.. ஒரு மனுஷர் ஆஸ்பிடலில் கிடக்கறார்.. அப்போ வந்து பார்க்க போலாமான்னு கூப்பிட்டேன்.. வேணாம்னு சொல்லிட்டு, இப்போ கூப்பிடறீங்க? . இல்லைங்க. நான் வரலை என்று தன்மானத்தோடு பேசுகிறாள் சரோ. இனிமேல் உன் கூடஜோடியா உன் அப்பா வீட்டுக்கு வருவது கனவிலும் நடக்காதுடி என்று சொல்லிவிட்டு, தான் மட்டும் தனியாக போய்விட்டு வந்துட்டான் மாணிக்கம்.

இப்போதும் இப்படி

இப்போதும் இப்படி

மாணிக்கத்தின் அம்மா.. டேய் உனக்கு காரியம் ஆகணும்னா சரோகிட்ட அன்பா நடந்துக்கோடா.. அவளை அப்பா வீட்டுக்கு அழைச்சுட்டு போன்னு சொல்ல, அப்போதும் மாட்டேன்னு சொல்றா சரோ உடனே கர்ப்பமாகி விடுகிறாள். இனி பஸ்ஸில் பயணிக்க வேண்டாம் என்று மாமியார் சொல்ல, நல்ல வேளை.. சரோ.. உன்கிட்ட போட்ட சவாலில் எங்கே நான் தோற்றுப் போவேனோன்னு நினைச்சேன்.. இனி நம்ம ஜோடியா உங்க அப்பா வீட்டுக்கு போக வேணாம் இல்லைன்னு சொல்லி சரோவை கதி கலங்க அடிக்கிறான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+