லண்டனில் விஜயகுமார் குடும்ப பங்க்ஷன்.. ஆனால் மஞ்சுளாவின் மகள்கள் மிஸ்ஸிங்.. கேப்ஷனை கவனித்தீர்களா?
சென்னை: நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதாவின் மகள் தியாவின் ரிசப்ஷன் லண்டனில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்களை அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அதில் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மகள்கள் குடும்பத்தினர் இல்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பழம்பெரும் நடிகரான விஜயகுமார் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து இப்ப வரைக்கும் முன்னணி கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் இவருடைய கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மரியாதை உள்ளதாகவே இருந்து வருகிறது.

விஜயகுமாரை போலவே அவருடைய மகன் மற்றும் மகள்களும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். விஜயகுமார் முத்து கண்ணு என்பவரை திருமணம் செய்ததில் கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் முத்து கண்ணுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடல் அவரை விஜயகுமார் விவாகரத்து செய்திருந்தார். அதற்குப் பிறகு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணமும் செய்திருந்தார்.

மஞ்சுளாவிற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். ஆனால் விஜயகுமார் தன்னுடைய இரண்டு குடும்பத்தினருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். இதில் நடிகை வனிதா மட்டும் தன் குடும்பத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தனியாக வாழ்ந்து வருகிறார். மற்ற எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜயகுமாரின் வீட்டில் அவருடைய இரண்டாவது மகள் அனிதா மட்டும் தான் சினிமாவில் நடிக்காமல் டாக்டராக மாறி இருக்கிறார்.

அனிதாவிற்கும் பல திரைப்பட வாய்ப்புகள் வந்தபோது அனிதாவின் அம்மா முத்து கண்ணு அனிதா படிப்பில் கெட்டிக்காரராக இருக்கிறார் அவர் படிப்பதை மட்டுமே கவனிக்கட்டும் என்று நடிப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் அதனாலேயே அனிதா நடிக்காமல் டாக்டர் ஆக மாறி இருக்கிறார் என்றும் பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவும் டாக்டராக இருக்கிறார். தியா தன்னோடு படித்த திலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் லண்டனில் தியா டாக்டராக வேலை பார்த்து வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக திலனுடன் திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து லண்டனில் தியாவின் ரிசப்ஷன் நடைபெற்று இருக்கிறது.

அதில் விஜயகுமார் குடும்பத்தினர் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அருண் விஜய், அனிதா, கவிதா குடும்பத்தினர் மட்டும்தான் அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் லண்டன் ரிசப்ஷனில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதாவது லண்டன் ரிசப்ஷனில் எடுத்த புகைப்படங்களை அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் நிலையில் ரசிகர்கள் அதிகமானோர் பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி குடும்பத்தினர் இந்த பங்க்ஷனில் கலந்து கொள்ளவில்லையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஏற்கனவே தியாவின் திருமணம் சென்னையில் நடைபெறும் போது ஸ்ரீதேவி மற்றும் பிரீத்தாவின் குடும்பத்தினர் இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு பல புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருந்தார்கள். இது அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. ஆனால் இப்போது பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி இருவர் குடும்பமும் லண்டன் ரிசப்ஷனில் மிஸ் ஆகி இருப்பது குறித்து அதிகமான கேள்விகள் குவிந்து வருகிறது.

அதே நேரத்தில் நடிகர் அருண் விஜய் தன்னுடைய அனிதா, கவிதா என்ற இரண்டு அக்காக்களோடு எடுத்த புகைப்படத்தை அனிதா தன்னுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு, "மந்திர மூன்று நாட்கள்.. அற்புதமான கொண்டாட்டம். தூய்மையான அன்பு, மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு எங்களின் சில இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தியா திலனின் வரவேற்பு கொண்டாட்ட புகைப்படங்கள் என்று அனிதா குறிப்பிட்டு இருக்கிறார்.

அதுபோல இன்னொரு பதிவில் விஜயகுமார் பார்க் ஒன்றில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் அனிதா வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு என்னுடைய அப்பா எப்போதும் ஹீரோ தான். இந்த வயதிலும் எனர்ஜி குறையாமல் உடற்பயிற்சி மேற்கொள்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் லைக் கொடுத்து வருகிறார்கள்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications