பெண் நிருபர் கேட்ட அந்த கேள்வி.. பாத்ரூமை திறந்து காட்டிய மன்சூர் அலிகான்.. கூடவே அந்த பஞ்ச் டயலாக்
சென்னை: பிரபல நடிகர் மன்சூர் அலிகான் திரைப்படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் தன்னுடைய மனதில் பட்டதை டக்கென்று பேசிவிடும் நபராக தான் இருக்கிறார்.
அதனாலயே பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கி விடுவதும் வழக்கமாக இருக்கிறது.

ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாத மன்சூர் அலிகான் தற்போது அவரிடம் பேட்டி எடுத்த நிருபரிடம் நடந்து கொண்ட விதம் குறித்து தற்போது இணையத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
90ஸ் கிட்ஸ்கள் பார்த்து மிரண்ட வில்ல நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் அதிகமாக சத்யராஜ், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களோடு வில்லனாக நடித்திருப்பார். இவருடைய நடிப்பு மற்றும் வில்லத்தனமான டயலாக் பார்த்து மிரண்டு போனவர்கள் ஏராளமானோர்.
அதிலும் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆக வெற்றி பெற்ற கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் இருக்கும். தத்ரூபமாக அப்படியே ஒரு மோசமான வில்லனை பார்த்த காட்சிகளை அனைவரின் முன்பு கொண்டு வந்து மிரட்டி இருப்பார். அது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரமாகவும் நடித்துக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து இருந்தது. ஆனாலும் சமூக நலனில் அக்கறை கொண்டு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக அதிகமாக மரம் வளர்ப்பது குறித்து பேசிக் கொண்டிருந்தார். அதுபோல தேர்தல்களில் சுயேசையாக போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
தொடர்ச்சியாக சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நிருபர் ஒருவர் அவருடைய வீட்டிற்கு பேட்டி எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அவரை பார்த்த மன்சூர் அலிகான் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது போன்று முகத்தை திருப்பி கொள்கிறார்.

மன்சூர் அலிகானிடம் நீங்க நல்லா இருக்கீங்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இது நாட்டுக்கு ரொம்ப தேவையா? அவனவன் வீடு இல்லாமல் அலைஞ்சுகிட்டு இருக்கான் என்று பேசுகிறார். அது தொடர்ந்து வீட்டில் இருக்கும் மரங்களை வெட்டாமல் அதன் பக்கத்திலேயே சுவர் வளர்த்திருப்பது குறித்து கேள்வி கேட்கப்படுகிறது.
அதற்கு நான் வீட்டுக்குள்ளே ஆறு மரங்களை வைத்திருக்கிறேன் என்று சொல்லி பாத்ரூம் அறையை திறந்து காண்பிக்க, அங்கே ஒரு பெரிய பனை மரத்தை காட்டுகிறார். அதை பார்த்தது நிருபர் அசந்து போய்விட, சமையலறையிலும் இரண்டு மரங்கள் இருக்கிறது. மரங்களை வெட்டுவது எனக்கு பிடிக்காது. அதனாலேயே வீட்டில் ஆறு மரங்களை வளர்த்து அதனோடு வீடு கட்டி வைத்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இப்படியாக இவர் பேசிய இந்த கலகலப்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications