Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Thirumanam Serial: காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதே திருமணம் சீரியல் கதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதே சீரியல் கதையாக இருக்கிறது.

ஜனனி சந்தோஷ் இருவரும் திருமணம் முடிந்து சந்தோஷமாக வாழ்வார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தால்...

ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள்...இல்லை எதாவது பிரச்சனை... என்னதான் செய்வார்கள் தம்பதியர் பாவம்!

ஜனனியை காணோம்

ஜனனியை காணோம்

ஜனனி சந்தோஷுக்கு திருமணம் சீரியலில் திருமணமாகி நிஜத்தில் கூட ஒரு வருஷம் ஆகிவிட்டது. அவர்கள் இன்னமும் ஒன்று சேர்ந்த பாடில்லை. சந்தோஷ் சக்தியை காதலித்து, ஜனனியை மணந்ததால் சக்தியை மறக்க முடியவில்லை என்று ஜனனியை டிவோர்ஸ் செய்வதாக பல மாதங்கள் கதை ஓடியது.

ஜனனிதான் இனி

ஜனனிதான் இனி

இனி ஜனனிதான் தனக்கு மனைவி என்று சந்தோஷ் ஒரு முடிவுக்கு வருவதற்கு நிஜத்திலும் ஒரு வருஷம் ஆனது.இதற்குள் காணாமல் போன மாயாவின் புருஷன் வந்து சேர்ந்தார். சக்தி காணாமல் போனாள். சந்தோஷ் காணாமல் போனான். அவனைத் தேடி ஜனனி அலைந்தாள்.

நவீன் அனிதா

நவீன் அனிதா

அனிதா நவீன் காதல் பிரச்சனையானது. இந்த காதல் வேண்டாம் என்று ஜனனி சொல்லியும், அனிதா நவீன் கேட்கலை. ஜனனி வீட்டில் பிரச்சனையானது. இதனால், தங்கை அனிதாவே அக்கா ஜனனி மேல் கோபம் கொண்டாள். இதை சாதகமாக்கிக் கொண்ட மாயா அனிதாவின் மனசை கலைத்தது.

ஜனனியைக் காணோம்

ஜனனியைக் காணோம்

இப்போது ஜனனியைக் காணோம். திருமணம் சீரியலில் திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையிலும் சந்தோஷும் ஜனனியும் சந்தோஷமாக வாழ்வைத் தொடங்கவில்லை. வாழவேண்டிய ஜனனி எங்கு போனாள்? எதற்காக போனாள்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுடன் திருமணம் சீரியல் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+