போட்டியாளர்களை கண்டுகொள்ளாத மாஸ்டர் செஃப் டீம்.. புலம்பும் போட்டியாளர்கள்.. ரசிகர்களின் கருத்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி பற்றி தற்போது சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டுகள் பரவிவருகிறது.
மாஸ்டர் செஃப் போட்டியாளர்களுக்கு ஆதரவாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி அறிமுகம்
சன் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிதான் மாஸ்டர் செஃப். இது சமையல் போட்டிக்கான நிகழ்ச்சியாக இருந்து வந்தது. அதுபோல இந்த நிகழ்ச்சி ஏற்கனவே 45 நாடுகளில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சி பிரிட்டனில் முதல் முறையாக யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிட்டானது. அதற்கு பிறகு அதை பார்த்து பல நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. அதே பாணியில் தான் தற்போது கடந்த ஆண்டு சன் டிவியும் தொடங்கியிருந்தது.

சன் டிவியின் எதிர்பார்ப்பு
விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவி ரியாலிட்டி ஷோ தொடங்கி அதில் பெரிய நடிகர்களை தொகுப்பாளராக களம் இறக்கி ரசிகர்களை கவர்வதற்காக முயற்சிகளை செய்து இருந்தது. ஆனால் சன் டிவி எதிர்பார்த்த வகையில் இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே பைனலுக்கு சென்றிருந்தனர்.

மாஸ்டர் செஃப் குழுவின் வாக்குறுதிகள்
இறுதிப்போட்டியில் வின்னி, நித்தியா, தேவகி மற்றும் கிருத்திகா என 4 பேர் பைனல் லிஸ்ட் ஆக சேவ் ஆகியிருந்தனர். இந்த நான்கு பேரில் தேவகி தான் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பின் தேவகிக்கு மாஸ்டர் செஃப் பட்டம் வழங்கப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சி முடிந்து பல மாதங்களுக்கு பிறகு நிகழ்ச்சி குறித்து போட்டியாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் புகார் புலம்பித் தள்ளி வருகிறார்களாம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு அவர்களுக்கான போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவுகளை திருப்பியளிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு மாஸ்டர் செஃப் குழுவினர் வாக்குறுதி தந்து இருந்தார்களாம்.

போட்டியாளர்களின் குற்றசாட்டு
ஆனால் நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. போக்குவரத்து பணம் எதையும் யாருக்கும் திருப்பித் தரவில்லையாம் இது தொடர்பாக நேசித்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் போட்டியாளர்கள் பேச முயன்றபோது போட்டியாளர்களுக்கு அவர்கள் சரியான பதில் கொடுக்கவில்லை என்று கருத்து வெளியாகி வருகிறது. அதனால் குறைந்த பட்சம் காசு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள் இதனால் இந்த விவகாரத்தை விடக்கூடாது என்று சமூக வலைத்தளங்கள் மூலமாக போட்டியாளர்கள் பேசி வருகிறார்களாம். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் ரொம்ப பீல் பண்ணாதீங்க, இதே எல்லா சேனல்களிலும் இதே நிலைமைதான் நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வாங்க நாங்க ஆதரவு தருகிறோம் என்று கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications