என் மீட்டர்... மேட்டர் மாஸ்டருக்கு தெரியும்.. ஜீனியஸ் கோவை சரளா
சென்னை: காஞ்சனா ஒன்..டு,த்ரீன்னு மூணு பார்ட்லயும் நகைச்சுவை நடிகை கோவை சரளா நடிச்சிருப்பார். நீங்க என்ன கதாபாத்திரம் அவருக்கு கொடுத்தாலும், அவரது கொஞ்சும் கோவை தமிழ் மாறாது அவரது பேச்சில்.
படத்தின், இயக்குனர், தயாரிப்பாளர் மாஸ்டர் லாரன்ஸ் கூட, என் படத்துல நான் ஹீரோன்னு சொல்றதை விட கோவை சரளாம்மா ஹீரோன்னு சொன்னாத்தான் சரியா இருக்கும்னு சொன்னார். காஞ்சனா இரு பகுதிகளில் கோவை சரளா நடிப்பு வேற லெவல்.
சன் பிக்சர்ஸ் காஞ்சனா 3 பார்ட்டையும் தயாரிச்சு இருக்காங்க. இந்த படத்தில் நடிகை ஓவியா, முதல் பகுதியில் நடிச்ச நடிகை வேதிகா, மற்றும் ஒரு புதுமுகம் நடிகை நடிச்சு இருக்காங்க.
கோவை சரளா பேசுகையில் என் மீட்டர் புடிச்சு, கதைக்கான மேட்டர் எழுதி என்னை நடிக்க வைக்கறதுல மாஸ்டர் ரொம்ப கில்லாடி. இதுக்கு நான் அவருக்கு தேங்க்ஸ் சொல்லணும் என்கிறார்.
காளிங்ஸ்... மீனா சிரிச்சாங்களே அது கூட உங்களை பார்த்துதான்.. கவுதம் கார்த்திக் கல கல!
வெளிநாட்டுல போயி நம்ம ஊர் கதை எழுதலாம், எடுக்கலாம்னு நான் நினைச்சுஇருக்கேன்.. ஆனா, அங்க நம்ம ஊர் ஒரிஜினாலிட்டி கிடைக்காதுன்னு கடைசி நேரத்துல கேன்சல் பண்ணிருவேன். வெளிநாட்டுல உட்கார்ந்து கதை எழுதினா கூட எனக்கு நம்ம ஊர் கதை வராது..
பார்ப்போம், எப்போ முடியுதோ, நம்பிகை வருதோ.. அப்போ வெளிநாட்டுக்கு போய் படம் எடுப்பேன். இதுவரைக்கும், ஈசிஆர், மகாபலிபுரம் இப்படித்தான் என் படங்களின் சூட் நினைத்து இருக்கேன்னு சொன்னார்.
காஞ்சனா படத்தை இப்போது காஞ்சனா 3 வரை எடுத்திருக்கும் மாஸ்டர் லாரன்ஸ், காஞ்சனா 10 என்பதை தொட்டாலும் ஆச்சரியமில்லை.