மாதம்பட்டி ரங்கராஜனுக்கு எதிராக ஜாய் செய்த சம்பவம்! முதல்வர் முக ஸ்டாலினை டேக் செய்து வைத்த கோரிக்கை.. வெடித்த பிரச்சனை
சென்னை: பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த விவகாரம் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, ஜாய் கிரிசில்டா அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்து, சமூக வலைதளத்தில் பகிரங்கமாக நீதி கேட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜன் பற்றிய சர்ச்சை
மாதம்பட்டி ரங்கராஜன் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும், முதல் மனைவியைப் பிரியாமலேயே, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டதுதான் இந்தச் சர்ச்சைகளின் ஆரம்பம். ஜாய், ரங்கராஜன் தனக்குக் கடன் இருப்பதாகவும், கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்னதாகவும் முன்னர் பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் வைத்த பகிரங்க வேண்டுகோள்
தற்போது ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பரபரப்பான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தான் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளை ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜன் கூறிய குற்றச்சாட்டுக்கு நீதி கேட்டு, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஒரு புகார் அளித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதிவில் கூறியுள்ள முக்கிய விஷயங்கள் இதோ: "எனது பிறக்காத குழந்தைக்காக நீதி வேண்டும்" என்று கோரி பதிவிட்டுள்ளார். நடிகர் மாதம்பட்டி ரங்கராஜன், திருமணத்தையும் கர்ப்பத்தையும் காரணம் காட்டி, எப்படி ஏமாற்றினார் என்பதை விவரித்து, 10 நாட்களுக்கு முன்பு சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். நான் தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறேன். புகார் அளிப்பதற்காக நான் என்னுடைய முற்றிலும் கண் தெரியாத தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன்.
ரங்கராஜன் ஒரு விஐபி சிகிச்சை பெறுகிறார். அவர் எனக்கெதிராகத் தரம் தாழ்ந்த, ஆபாசமான மற்றும் உள்நோக்கம் கொண்ட சமூக ஊடக பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். ஒரு விஐபி, பெண்களுக்கு எதிராக இப்படி ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, எந்த நடவடிக்கையும் இல்லாமல் தப்பிக்க முடியுமா? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இந்தப் பதிவில் அவர், தமிழ்நாடு முதல்வர், சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் சென்னை காவல்துறை ஆகியோரை டேக் செய்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் எனப் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications