மீனாட்சி பொண்ணுங்க: ப்ரியாவை வைத்து கேம் விளையாடும் ரங்கநாயகி.. ஷக்தி செய்ய போவது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் டிசம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அந்த வகையில் ஜீ தமிழில் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சித்தாள்கள் தங்களை தூங்க விடாமல் டார்ச்சர் பண்ணியதை பூஜா நிரூபிப்பதற்காக தன் அறைக்கு ரங்கநாயகியை அழைத்துச் செல்ல இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க ‌

 Meenakshi Ponnunga Serial December 20th Episode Ranganayaki playing games with Priya

அதாவது, பூஜா சொன்னது போல அங்கே சித்தாள்கள் தங்கியதற்கான தடயமே இல்லை. ரங்கநாயகி பூஜாவிடம் சக்தியை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ குழப்பாதே என்று சொல்லி திட்டுகிறாள்.

 Meenakshi Ponnunga Serial December 20th Episode Ranganayaki playing games with Priya

பிறகு யமுனா கார்த்திக்கிற்கு போன் செய்து நான் உங்களை உடனே பார்த்தாக வேண்டும் என்று சொல்ல, அவன் தனக்கு வேலை இருக்கிறது என்று சொல்ல, யாரு உங்க போன்ல பேசினது என்று யமுனா கேட்க, தன்னை சந்தேகப்படுவதாக நினைக்கும் கார்த்திக் கோபத்தில் போனை கட் செய்து விடுகிறான்.

அடுத்து வரும் வழியில் பிரியா பிய்ந்து போன செருப்புடன் நிற்க, வழியில் என்னை டிராப் செய்யுங்கள் என்று பிரியா சொல்கிறாள். வேறு வழியின்றி கார்த்திக் அவளை தன் பைக்கில் அழைத்துப் போகிறான். அதை யமுனா பார்த்து விடுகிறாள். இதனால் டென்ஷன் ஆகிறாள். பிரியா வேண்டுமென்றே கார்த்திக்கின் மேல் கை வைத்துக் கொண்டு பைக்கில் போக யமுனா அதிர்ச்சியாகிறாள்.

 Meenakshi Ponnunga Serial December 20th Episode Ranganayaki playing games with Priya

பூஜா பிரியாவுக்கு போன் செய்து நாளை காலை 9:00 மணிக்கு கோவிலில் இருக்க வேண்டும், கார்த்திக்கும் வருவான், யமுனாவும் வருவாள் என்று சொல்லுகிறாள். ரங்கநாயகி கோகிலாவிடம் நாளை காலை கார்த்திக்கை 9 மணிக்கு கோவிலுக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறாள்.

 Meenakshi Ponnunga Serial December 20th Episode Ranganayaki playing games with Priya

மறுநாள் கார்த்திக்கும். பிரியாவும் கோவிலில் தற்செயலாக சந்தித்து கொள்கிறார்கள். பூஜா யமுனாவைப் பார்த்து, கோவிலில் கார்த்திக்குடன் வேறு ஒரு பெண்ணை பார்த்தேன் என்று சொல்ல, யமுனா கோவிலுக்கு ஓடுகிறாள். அங்கே பிரியாவையும் கார்த்திக்கையும் பார்க்கும் யமுனா கோபமாகி கார்த்திக்கிடம் சண்டை போட, கார்த்திக் கோபமாகி அவளைத் தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து போய் விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+