பரவை முனியம்மாவிற்கும் சித்தார்த் அபிமன்யுவுக்கும் இப்படி ஒரு சம்பந்தமா? இயக்குனர் உடைத்த ரகசியம்
சென்னை: பல தெலுங்கு திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து பிரபலமானவர்தான் மோகன் ராஜா.
இவர் இயக்கத்தில் பெரிய அளவில் ஹிட்டான தனி ஒருவன் திரைப்படம் பற்றிய சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லன் சித்தார்த் அபிமன்யு கேரக்டர் உருவான விதம் குறித்தும் அதற்கு இன்ஸ்பிரேஷனாக பரவை முனியம்மா தான் இருந்தார் என்பது பற்றியும் அந்த பேட்டியில் மோகன் ராஜா பேசியிருக்கிறார்.
இயக்குனர் மோகன் ராஜா ஆரம்பத்தில் பல பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்து கொண்டிருந்தது போலத்தான் ஜெயம் திரைப்படத்தையும் ரீமேக் செய்தார். அந்த திரைப்படத்தில் தான் அவருடைய தம்பி ரவி ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் பெரிய அளவில் ஹிட்டானதால் இப்ப வரைக்கும் அவர் ஜெயம் ரவி என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறார். அதற்குப் பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற பல படங்களை மோகன் ராஜா இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் மோகன் ராஜாவே சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம் தான் தனி ஒருவன். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா என பல பிரபலங்கள் நடித்து பெரிய அளவில் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. அதுபோல அந்த திரைப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்த சித்தார்த் அபிமன்யு வில்லன் கேரக்டரை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
பொதுவாக ஹீரோவை விட வில்லனை அதிகமான ரசிகர்கள் விரும்பினால் அந்த படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகும் என்பதற்கு தனி ஒருவன் படம் பெரிய அளவில் முன்மாதிரியாக அமைந்திருந்தது. ஆனால் அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த மோசமான வில்லன் கதாபாத்திரத்திற்கு மோகன் ராஜா பரவை முனியம்மாவை வைத்து தான் ரெஃபரன்ஸ் எடுத்தாராம். இது யாருக்கும் நம்ப முடியாத தகவலாக தான் இருக்கும்.
ஆனால் அது பற்றி மோகன் ராஜாவே பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இதுவரைக்கும் பல தமிழ் சினிமாவில் காட்டாத ஒரு வில்லனாக சித்தார்த் அபிமன்யுவை காட்ட வேண்டும் என்று நான் பல திரைப்படங்களில் ரெஃபரன்ஸ் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கடைசியாக சி எஸ் அமுதன் இயக்கிய தமிழ் படம் என்ற திரைப்படத்தையும் போட்டு பார்த்து அதில் அந்த சீனையும் ரெஃபரன்ஸாக எடுத்து அதை வைத்து தான் சித்தார்த்த அபிபன்யு கேரக்டரையே உருவாக்கினேன் என்று கூறியிருக்கிறார்.
அதாவது தமிழ் படம் கிளைமாக்ஸ் முழுக்க வில்லன் திரும்பியே இருப்பார் அப்போது அவர் யாரென்று யாருக்குமே தெரியாது. கடைசியாக அந்த சேர் திரும்பியதும் பரவை முனியம்மா தான் வில்லி. அவர் சொல்லும் வசனம் தான் என்னுடைய இந்த சித்தார்த்த அபிமன்யு உருவாக காரணமாக இருந்தது என்று மோகன் ராஜா சொல்லி இருக்கிறார்.
அது வேறொன்றுமில்லை "உன்னை ஹீரோவாக்க நான் வில்லன் ஆகிட்டேன்" என்று அவரோட பாட்டி சொல்வார். அதுதான் என்னுடைய இந்த கேரக்டரை உருவாக்க ஸ்ட்ராங்காக இருந்தது. இது குறித்து நான் அந்த தமிழ் பட இயக்குனர் அமுதனிடம் கூட கூறினேன். ஆனால் அமுதன் கூட இதை நம்பவில்லை என்று அந்த பேட்டியில் மோகன் ராஜா பேசியிருக்கிறார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications