Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டோஸ் விட்ட நயன்தாரா.. யாரு அவங்களையா? அதைவிடுங்க, காவாலா டான்ஸ் ஆடியவர் மூக்குத்தி அம்மனா?: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூக்குத்தி அம்மன் பட பூஜையின் விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், காஸ்ட்யூம் தொடர்பான பிரச்சினையில் உதவி இயக்குநர் ஒருவரை, நடிகை நயன்தாரா மோசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த இயக்குநர் சுந்தர். சி, தமன்னாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக, இணையத்தில் தகவல்கள் பரபரத்து வருகின்றன.. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் பட பூஜையில், நயன்தாரா ஏற்படுத்திய சலசலப்பு இன்னும் ஓயவில்லை. இந்நிலையில், பொள்ளாச்சியில் முதல்நாள் படப்பிடிப்பில், காஸ்ட்யூம் தொடர்பான விஷயத்தில் நயன்தாரா டென்ஷனாகிவிட்டாராம்.

Television Nayanthara tamannaah

உதவி இயக்குனர் - நயன்தாரா

இதனால், உதவி இயக்குநர் ஒருவரை நடிகை நயன்தாரா மோசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தெரிந்து கோபமடைந்த இயக்குநர் சுந்தர். சி, ஷூட்டிங்கை நிறுத்த முடிவு செய்தாராம்.. பிறகு, நயன்தாராவை மாற்றிவிட்டு தமன்னாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்ததாகவும் தெரிகிறது.

ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நயன்தாராவிடம் பேசி பிரச்சினையை முடித்ததாக சொல்கிறார்கள்.. எனினும், பொள்ளாச்சி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை ஆலப்பாக்கம் பொன்னியம்மன் கோயிலில் படப்பிடிப்பை தொடர்ந்திருக்கிறார்கள்.. எனினும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில், நயன்தாராவுக்கு பதில், தமன்னா நடிக்க போவதாக தொடர்ந்து சலசலப்புகள் எழுந்தவாறே உள்ளது.. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

டோஸ் விட்ட நயன்தாரா

AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ஏற்கனவே ரெஜினா மீது நயன்தாராவுக்கு செம கோபம் இருக்கிறது.. மூக்குத்தி அம்மன் பூஜையில், தன்னை கேட்காமலேயே செல்பி எடுத்துவிட்டாராம் ரெஜினா.. அதனால்தான், கேரவன் கூப்பிட்டு டோஸ் விட்டுள்ளார் நயன்தாரா.

பொள்ளாச்சியில் முதல்நாள் மூக்குத்தி அம்மன் ஷூட்டிங் நடந்துள்ளது.. முதல்நாளே காஸ்ட்யூமர் டிசைனுடன் நயன்தாரா பிரச்சனை செய்துள்ளார்.. இறுதியில் சுந்தர் சி-யிடம் புகார் கொண்டு போய்விட்டார் அந்த காஸ்ட்யூமர்.. பிறகு சுந்தர் சி இந்த விஷயத்தில் தலையிட்டு, சாமி படங்களில் காஸ்ட்யூம்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறி பிரச்சனையை சரி செய்துள்ளார்.. ஆகமொத்தம், நயன்தாரா ஒரு இடத்தில் இருந்தாலே அங்கே பிரச்சனைதானே?

தமன்னா அம்மனா

இந்த சம்பவத்துக்கு பிறகு, நயன்தாராவுக்கு பதில் தமன்னாவை போடலாமா? என்று சுந்தர் சி யோசித்து வருவதாக தகவல் வெளியாகிவிட்டது.. காவாலா பாட்டில் ஆடிய தமன்னாவை கொண்டுவந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க வைத்தால் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் இல்லையா? பேய் பிசாசு என்றால் ஒப்புக் கொள்வார்கள்.. சாமி வேடம் என்றால் எப்படி? கேஆர் விஜயா நடிக்கக்கூடிய கேரக்டரில் சோனாவை நடிக்க வைக்க முடியுமா?

மூக்குத்தி அம்மன் முதல் நாள் ஷூட்டிங்

மூக்குத்தி அம்மன் முதல் நாள் கூட்டிங்கில் ஏற்பட்ட பஞ்சாயத்து இப்போது சரியாகிவிட்டது. ஆனால், அடுத்த பஞ்சாயத்து வரும.. தினமும் நயன்தாராவுக்கு ஏதாவது ஒரு டாபிக் இருந்துட்டே இருக்கணும்.. அவங்களுக்கு ஏதாவது ஒரு டாபிக் வேணும். அவங்களே சும்மா இருந்தாலும், நயன்தாரா ஏன் அமைதியாக இருக்கிறார்? என்று அதையும் கேள்வி கேட்கிறார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+