காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் மாதிரி!
சென்னை:சன் டிவியின் கண்மனி சீரியல் பரவால்ல ரகம்தான். ஆனா, படப்பிடிப்பு நடத்தி இருக்கும் விதம். லைட்டிங் எல்லாம் ரொம்ப சரியா நல்லா இருக்கு..
அதனால கண்மணி சீரியலை ரசிச்சுப் பார்க்கலாம். சஞ்சீவ் நடிப்பு நல்லா இருந்தாலும் ,இப்போ அவருக்கு எதுவும் நடிக்க.வாய்ப்பு இல்லை.
அதனால சீரியல் பார்க்க போராத்தான் இருக்கு.
வழக்கமா பணக்கார வீடுகளில் பொம்பளைங்க ஏழைங்களை துன்புறுத்தி வில்லத்தனமான காட்டுவது கூட பொறுமை இழப்பா இருக்கு. எத்தனை பொம்பளைங்களை,எத்தனை சீரியலில் இப்படியே காமிச்சுக்கிட்டு இருப்பீங்க.
விட்ட இடத்தை பிடிக்கப் போறாராமே ராதிகா... பேஷ் பேஷ்!
சவுந்தர்யாவும், கண்ணனும் ஒரே வீட்டில் இருக்காங்க. சவுந்தர்யா மனசுல கண்ணன் மாமாவை உருகி உருகி காதலிக்கறது தெரிஞ்சும், விஜயலட்சுமி அம்மாவுக்கும், அவர் புருஷனுக்கும் கண்ணன்கிட்ட சவுந்தரயா லவ் பத்திப் பேச நேரமில்லையாம்.
முத்து செல்விதான் ஏற்கனவே சின்னவரு மேல ஆசையோட இருக்காளே..என்னவோ,போஸ்டர் அடிச்சதுனாலதான் என்பேர் கெட்டுடக்கூடாதுன்னு, சின்னவருதான் என்னைக் கட்டிக்கறேன்னு சொன்னார். இதுலே என் தப்பு எங்கம்மா இருக்குன்னு கேட்கறா முத்து செல்வி.
இவ மாஞ்செடிகிட்ட பேசினது, சின்னவருகூட ஆசையா போட்டோ எடுத்துகிட்டு அதைப்பார்த்து பார்த்து சந்தோஷப்பட்டது..சின்னவரு வச்ச பொட்டை எடுத்து வச்சது..முருகனா நடிச்சு,வள்ளி கல்யாணத்துல சின்னவரு தாலி கட்டினதை கழுத்திலேயே மறைச்சு வச்சுக்கிட்டு இருக்கறது இதுக்கெல்லாம் பேரு என்ன?
காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன மாதிரி,காத்திருந்த சவுண்டு மாமாவை கோட்டை விட்டுட்டா.நேத்து வந்த முத்து செல்வி நல்ல வெவரமா இருந்து சின்னவரை கல்யாணம் கட்டிக்க போறா.