அடடா... இன்னும் ஆர்மியே ஆரம்பிக்கலை.. அதுக்குள்ள டாட்டா காட்டிட்டுப் போயிட்டாங்களே நதியா!
சென்னை: சன் டிவியின் 9 மணி நேர ஸ்லாட்டில் நடிகை நதியா கடந்த ஒரு வாரத்துக்கு மேல ரசிகர்களை குஷிப்படுத்திகிட்டு இருந்தாங்க. நேத்து எல்லாருக்கும் டாட்டா காமிச்சுட்டு மும்பைக்கு போயிட்டாங்க.
ரோஜாவும், அர்ஜுனும் மறுபடியும் சென்னைக்கு வர எனக்கு வாய்ப்பு குடுப்பாங்கன்னு நினைக்கறேன்னு சொல்றாங்க. ரோஜாவும், அர்ஜுனும் உண்மையா லவ் பண்ண ஆரம்பிச்சு, அவங்க கல்யாணத்துக்கு வருவாங்க போல..
நதியா மாதிரி ஒரு ஸ்டார் வரத்துக்கு காத்திருந்தாதான் என்ன.. ரசிகர்களுக்கு என்ன ஒரு கவலைன்னா அவங்க இன்னும் ரெண்டு மூணு வாரம் நடிச்சுக்கிட்டு இருந்திருந்தாங்கன்னா நதியா ஆர்மி ஆரம்பிச்சு இருக்கலாமே.. அதுக்குள்ளே டாடா காமிச்சுட்டாங்களே அப்டீன்னு ஏகத்துக்கும் வருத்தம்.
அக்கா ரொம்ப டல்லடிக்குதுக்கா.. சந்திராவை சீக்கிரம் கண்டுபிடிக்க கூடாதா?!
உண்மையில சொல்ல போனா, நதியா வந்ததுல அவங்க கிரேஸுக்காக சீரியல் பார்த்தங்களே தவிர, கதை ஒரு வாரமா அங்கிட்டு, இங்கிட்டு நகரலை. சும்மா நதியாவை பார்த்துகிட்டு இருக்க நம்ம ஊரு சீரியல் விரும்பிகளுக்கு சுத்தமா திருப்தி இல்லை.
அப்பாடா, நதியா கிளம்பிட்டாங்க... இனிமே ரோஜா.அர்ஜுன் உண்மையா காதலிக்க போறாங்க.. ரொமான்ஸ் களை கட்டப் போகுதுன்னு காத்திருப்பவங்கதான் அதிகம். மக்களிடம் ரோஜா சீரியல் எதுனால பிடிச்சிருக்குன்னு கேட்டதுக்கு அதுல ரொமான்ஸ்தான்னு சொன்னாங்களாம்.
பொய்யில்லைங்க.. நிஜம்.. அம்புட்டு ரொமான்ஸ் அப்பி எடுக்குது.!