Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது வெள்ளம் இல்ல சுனாமி ! என் 20 மாடுகளும் வெள்ளத்தில் மூழ்கிடுச்சி.. நீயா நானாவில் இளைஞர் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருவெள்ளத்தின் போது கார் மூழ்கிய போது உள்ளே சிக்கிய தன்னால் கதவை கூட திறக்க முடியவில்லை என்றும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு இளைஞர் தெரிவித்த காட்சி மனதை பதைபதைக்கிறது.

மிக்ஜாம் புயலால் சென்னையில் அதிக அளவு மழை பெய்து எல்லா இடங்களிலும் வெள்ள நீர் தேங்கியது. பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கின. கிட்டதட்ட 4 அடி முதல் 15 அடி வரை தண்ணீர் தேங்கி மக்களை கதி கலங்க வைத்தது.

Neeya Naana: Chennai Floods 2023 is athe topic for discussion

இந்த சென்னை பெருவெள்ளத்தில் இழந்ததை இன்னமும் மீட்க முடியாமல் மக்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். விஜய் டிவியில் நீயா நானா ஷோவில் சென்னை பெருவெள்ளம் குறித்து விவாதம் நடந்தது. அந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது. இதற்கான ப்ரோமோவில் ஒரு இளைஞர் கூறிகையில், சார் கார் மூழ்கும் காட்சிகளை நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் நான் அந்த மூழ்கிய காருக்குள் உட்கார்ந்திருந்தேன். என்னால் கதவை கூட திறக்க முடியவில்லை என்றார். இன்னொரு இளைஞர் சார் ஒரு குழந்தை 2 மணி நேரமாக விட்டுவிட்டு அழுதுக் கொண்டே இருந்தது. நான் என்னவென கேட்டேன். அதற்கு அந்த குழந்தையின் தாய், பால் இல்லை என்றார். நாங்கள் பள்ளிக்கரணையிலிருந்து மேடவாக்கத்திற்கு சென்று பால் வாங்கிகொடுத்தோம். அந்த அம்மா அழுதாங்க சார் என்றார்.

இன்னொருவர், சார் ஒரு மாடு இல்லை 2 மாடு இல்லை , என்னோட 20 மாடுகளும் நீரில் மூழ்கிவிட்டது, என் வாழ்வாதாரமே போச்சு. என் வீடு மூழ்கியது என கண்ணீர் மல்க தெரிவித்தார். அது போல் நீயா நானா கோபிநாத், வெள்ளம் வந்ததும் எந்த பொருளை முதலில் எடுத்தீர்கள் என கேட்டார்.

அதற்கு அங்கிருந்தவர்கள், லேப்டாப், சார்ஜர், பவர் பேங்க், குழந்தை, சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை எடுத்ததாக சொன்னார்கள். ஒருவர் கூறுகையில் தண்ணீர் அப்படியே 30 வினாடிகளுக்குள் வந்துவிட்டது சார் என்றார். மேலும் ஒரு பெண் கூறுகையில் 55 ஏக்கரை 10 நிமிடத்தில் சுனாமி போல் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. குடிக்கத் தண்ணீர் இல்லாமல், மழை நீரை காய்ச்சி குடித்தோம் என மற்றொரு பெண் தெரிவித்தார்.

அது போல் நடிகை அறந்தாங்கி நிஷாவும் அமுதவாணனும் கூறுகையில் எங்க பார்த்தாலும் தண்ணீர் தேங்கியதால் எந்த பகுதிக்கு உதவி தேவை என கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. ஒரு கான்ஸ்டபிளிடம் போன் போட்டு கேட்டு சென்றோம் என அறங்தாங்கி நிஷா தெரிவித்தார். அது போல் அமுதவாணன் மக்களை மீட்க படகு இல்லாமல் தவித்தேன்.

என் குழந்தைக்கு அமெரிக்காவில் வாங்கிய படகில் கயிறு கட்டி மூன்று மூன்று பேராக 56 பேரை படகில் மீட்டோம் என்றார். இப்படியாக சென்னை பெருவெள்ளம் பலரது வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+