நீயா நானா: இது என்ன கோபிநாத்துக்கு வந்த சோதனை? நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்து சண்டையிட்ட 2 பெண்கள்
சென்னை: விஜய் டிவியில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு உழவர் ஸ்பெஷல் என ஜனவரி 16ஆம் தேதி நீயா நானா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் தற்போது மூன்று ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.
அதுபோல இந்த நிகழ்ச்சியில் தமிழக வீர விளையாட்டு இளைஞர்கள் மற்றும் சின்னத்திரை சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் தமிழகத்தில் உள்ள வீர விளையாட்டு வீரர்கள் தங்களுடைய திறமையை நீயா நானா அரங்கத்தில் காட்டி இருக்கின்றனர்.
அப்போது பட்டுப்புடவை கட்டிய இரண்டு பெண்கள் மல்லுக்கட்டி குஸ்தி சண்டை போட்டதை பார்த்து கோபிநாத் பதறிப் போய் இருக்கிறார். எதனால் இந்த சம்பவம் நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரத்திலும் ஞாயிற்று கிழமை மட்டும் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி தொடங்கிய காலகட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களிலும் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில் விஜய் டிவியில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஞாயிறு, திங்கள், செவ்வாய் என மூன்று நாட்களும் நீயா நானா ஸ்பெஷல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதில் வரும் ஜனவரி 16 அதாவது உழவர் தினத்தன்று உழவர் தின ஸ்பெஷல் நீயா நானா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் உள்ள வீர விளையாட்டு இளைஞர்கள் ஒரு பக்கத்திலும், சின்னத்திரை சினிமா நட்சத்திரங்கள் மற்றொரு பக்கத்திலும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர்.
நட்சத்திரங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளையாட்டு வீரர்கள் அளிக்கும் சுவாரசியமான பதில்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் திறமைகள் குறித்த ப்ரோமோக்கள் இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் இரண்டாவது ப்ரோமோவில் இரண்டு பட்டு புடவை கட்டிய பெண்கள் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மேடையில் குஸ்தி போடுகின்றனர்.

அதில் யாருடைய முதுகு முதலில் தரையில் படுகிறதோ அவர்கள் தோற்று விடுவார்கள் என்று கோபிநாத் கூறி இருக்கும் நிலையில் அங்கு சில பெண்களும் சண்டையிட்டு மல்லு கட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து மாடு பிடி வீரர்களும் அங்கு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு மாடுபிடி வீரர் நாங்க மாட்டை பிடிக்கும் போகும் போது மாடை புடிக்க போற மாதிரி நினைக்க மாட்டோம்...
அத்தை பொண்ண கட்டி பிடிக்க போற மாதிரி தான் நாங்க பிடிக்கப் போவோம் என்று சொல்ல அங்கிருந்த பிரபலங்கள் அனைவரும் சிரித்துக்கொண்டிருக்கின்றனர். அதுபோல இன்னொரு ப்ரோமோவில் அங்கு இருக்கும் இளவட்ட கல்லை அங்கு இருக்கும் வீரர்கள் எளிதாக தூக்கி போட்டு சாதனை செய்து கொண்டு இருக்க அதை பார்த்து நட்சத்திரங்கள் முயற்சி செய்து பார்க்கின்றனர். ஆனால் அவர்களால் ஒரு இன்ச் கூட அசைக்க முடியவில்லை.

இறுதியாக நட்சத்திரங்கள் எல்லோரும் சேர்ந்து கோபிநாத்தை களம் இறக்கி நீங்களும் இதை தூக்குங்க சார் என்று வேண்டுகோள், வைக்க, கல்லை தூக்குற மாதிரி ஆக்சன் காட்டி பிறகு அங்கிருக்கும் ஒரு செட்டிங் அட்டையை தூக்கி பாகுபலி ரேஞ்சிக்கு கோபிநாத் சீன் போட்டு கொண்டு இருக்க இந்த ப்ரோமோவும் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications