நெஞ்சத்தை கிள்ளாதே: கோபத்தை கொட்டிய கௌதமுக்கு மதுமிதா கொடுத்த பதிலடி.. நடந்தது என்ன? இன்றைய எபிசோட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதமுக்கு ஆபிஸ் குறித்த உண்மைகள் தெரிந்து மீட்டிங்கை கூட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கௌதம் மீட்டிங்கில் எல்லாருக்கும் ஒரு நாள் டைம் கொடுக்கிறேன், அதுக்குள்ள எங்க தப்பு நடந்திருக்குனு கண்டுபிடிங்க என்று சொல்கிறான்.

இதையடுத்து கௌதம் வீட்டிற்கு டென்ஷனாக வர பாட்டி மதுமிதாவிடம் போய் பேக்கை வாங்கு என்று சொல்ல மதுவும் வாங்க போக கௌதம் கோபமாக கொடுக்கிறான். அடுத்து சாப்பிட கூப்பிட கௌதம் சாப்பாடு வேண்டாம் என்று ரூமுக்கு சென்று விடுகிறான்.
பாட்டி திரும்பவும் கூப்பிட சொல்ல மது ரூமூக்கு வந்து மீண்டும் கூப்பிட கௌதம் கோபப்பட்டு திட்டுகிறான்.இத்தனை நாளா நீங்க சொல்லி சாப்பிட்டேனா? ஒரு முறை போனை கட் பண்ணா புரியாதா? திரும்ப திரும்ப போன் பண்ணுவீங்களா? என்று கோபப்படுகிறான்.
மறுபக்கம் மாயா தூக்கம் வராமல் தம் அடிக்க பால்கனிக்கு செல்ல ஜீவா எழுந்து வந்து விட சிகிரெட்டை தூக்கி போட்டு சமாளிக்கிறாள். இங்கே கௌதம் பசியில் தூக்கம் வராமல் சாப்பிட கிச்சனுக்கு போக மது அதை பார்த்து விட்டு சப்பாத்தியை சூடு பண்ணி கொடுக்கிறாள்.
அதன் பிறகு எதிரில் இருப்பவர்கள் என்ன சொல்றாங்கன்னு கூடவா காது கொடுத்து கேட்க மாட்டிங்க என்று கோபப்பட கௌதம் தன் மீது தான் தவறு என்று மன்னிப்பு கேட்கிறான். அடுத்து ரூமுக்கு வந்ததும் மதுமிதா உங்க கிட்ட நானா பேச வரல, எல்லாம் பாட்டி சொல்லி தான் செய்தேன் என்று கோபப்படுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications