நீலாம்பரி நிலாவை மருமகளாக்க நினைக்க ... மகனோ நிலா தங்கச்சி பின்னால சுத்தறானே!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் ஆரம்பிச்சு ரெண்டு வாரங்களுக்கு மேல ஆகியும் கூட, பல விஷயங்கள் புரியாத புதிராவே இருக்கு. நிலாவுக்கு உண்மையான அம்மா , அப்பா இவங்கதானா?
நிலாவை தனக்கு மருமகளாக்க நீலாம்பரி துடிக்கறாங்களே ஏன்? நீலாம்பரி வீட்டுல கட்டி போட்டு வச்சுருக்கற பொண்ணு யாரு.. இப்படி பல விஷயஙங்கள் தெரிஞ்சுக்க ஆவல் வருது.
ஆனா, நிலா அப்பா சொல்றார் உன்மேல அம்மாவுக்கு பாசம் அதிகம்மா.. அதனாலதான் உன்கிட்ட மட்டும் கண்டிப்பா நடந்துக்கறான்னு.. இதை தெரிஞ்சுக்கவே பல பேர் நிலா சீரியலை தொடர்ந்து பார்க்கறாங்க.
கை போட்டுக்கோங்க மாமா.. ரைட்ஸ் இருக்கு மாமா.. சிணுங்கிய அனு.. அதிர்ந்து நெளிந்த ரோஜா!
கல்யாணம் வேண்டாம்
நீலாம்பரி தன் மகனை, பெங்களூருவில் இருந்து உடனடியா கிளம்பி வர சொல்லி, நிலா போட்டோவை காமிக்கறாங்க. எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லைம்மா.. பொண்ணு நல்லாருக்குன்னுதானே சொன்னேன்னு சொல்லிடறான் பையன். நீலாம்பரி ஒரு முடிவெடுத்துட்டா சாமியால கூட மாத்த முடியாதுன்னு சொல்றாங்க நீலாம்பரி.
குட்டி 16 அடி
நீலாம்பரி மகன் தனது மாமாகிட்ட சொல்றான், தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி 16 அடி பாயும்..போகப் போக என் ஆட்டத்தை பாருங்க மாமான்னு சொல்றான். பொண்ணுகளை என் பக்கம் இழுப்பது எனக்கு சாதாரண விஷயம்னு சொல்றவன் இவன்.
யாரையாவது காதலிக்கறாளா
நிலாவின் அம்மாவை அழைச்சு, உண்மையை சொல்லுங்க..உங்க பொண்ணு யாரையாவது காதலிக்கறாளான்னு கேட்கறாங்க. ஆனா, நிலாதான் என் மருமகன்னு நான் முடிவு பண்ணிட்டேன்னும் சொல்றாங்க.நிலா கார்த்திக் மேல் விருப்பப்படுவதை சொல்லி, ஆனா, அப்பா, அம்மா எங்க பேச்சை நிலா மீற மாட்டா மேடம்னு நிலா அம்மா சொல்றாங்க.
ஸ்வேதா
நீலாம்பரி பையன் ரெண்டு நாளாவே நிலாவின் தங்கை ஸ்வேதாவை ஃபாலோ பண்றான். அவள் ஸ்கூட்டியை விட்டுட்டு கடைக்குள் போய் வருவதற்குள் டயரில் காத்தை புடுங்கி விட்டுடறான். உதவி செய்யட்டுமான்னு கேட்க, நீதானே காத்தை புடுங்கி விட்டேன்னு கேட்கறா ஸ்வேதா.
பார்க்க ஆரம்பிச்சுட்டா
இல்லைன்னு நிரூபிக்க நான் என்ன பண்ணனும்னு கேட்கறான் இவன். அதோ இருக்காங்களே அந்த பொண்ணுங்க.. அவங்ககிட்ட போயி ஃபிரண்டாகு பார்ப்போம்னு சொல்றா. இவனும் ரெண்டு பொண்ணுங்ககிட்ட பேசி, செல்ஃபி எடுத்து, விசிட்டிங் கார்டு குடுக்கற அளவுக்கு போயிடறான். வியந்து போயி அவனையே பார்த்து நிக்கறா ஸ்வேதா.. மறுபடியும் உதவி வேணுமான்னு அவன்கேட்க, வேணாம்னு சொல்லிடறா. இவன் வண்டியை எடுக்க, அவனையே பார்த்து நிக்கறா ஸ்வேதா.
ஏன் அப்படி?
பார்க்க வச்சுட்டேன்ல... பாரு இன்னும் என்னென்ன செய்ய போறேன்னுன்னு தனக்குள்ளே சொல்லிகிட்டே கிளம்பறான். இப்போ சீரியல்களில் அக்காவை பார்க்க போனா தங்கச்சியை புடிச்சு போகுது. தம்பியை பார்க்க போனா அண்ணனை பிடிச்சு போகுதே.. ஏன்?