Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைகள் புதிய திருப்பத்தை எடுத்துள்ளன. குறிப்பாக நடிகை திரிஷா உடன் அவர் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. இந்த சம்பவம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படாமல், அவரது குடும்ப வாழ்க்கையுடன் இணைத்து பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் செய்தி வாசிப்பாளரும் அரசியல் பிரமுகருமான நிர்மலா பெரியசாமி அளித்த பேட்டி தான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது. அவர் மிகவும் நேரடியாகவும், எதையும் மறைக்காமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Vijay Trisha Nirmala Periyasamy Tamil Cinema

நிர்மலா பெரியசாமி ஆதங்கம்

நிர்மலா பெரியசாமி பேசும்போது, "ஒரு பெண் என்ற அடிப்படையில் நான் சொல்லுகிறேன்... விஜய்க்கு ஒரு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் திரிஷாவை கூட்டிட்டு கல்யாணத்திற்கு போவது - அது சாதாரண விஷயம் இல்ல. அது அவருடைய மனைவி சங்கீதாவுக்கு எரிச்சல் வர மாதிரி செய்தது. அவருடைய மனதை நோகடிக்கணும்னு நினைச்சு செய்திருக்கலாம். இல்லன்னா ஒரு அகங்காரம்... 'நான் இப்படித்தான் செய்வேன், இப்ப என்ன பண்ணப்போறீங்க?'ன்னு காட்டுற மாதிரி இருந்திருக்கும்.

ஆணின் கடமை

ஒரு ஆணுக்கு முதலில் என்ன கடமைன்னா, பெற்றோரை பார்த்துக்கணும். குடும்பத்தை கவனிக்கணும். பணம் இல்லாத பெற்றோருக்கு உதவி செய்யணும். பெற்றவர்களுக்கு அன்பும் மரியாதையும் கொடுக்கணும். குழந்தைகளை கடைசி வரைக்கும் பார்த்துக்கணும். அதுக்கப்புறம் முக்கியமானது - கட்டுன மனைவியை நல்லபடியா பார்த்துக்கணும். இத்தனை வருடம் குடும்பமா வாழ்ந்த பிறகு கண்டபடி போயிட்டு இருந்தா, மனைவி கேள்வி கேட்கத்தான் செய்வா. அதுல என்ன தவறு?

விஜய் பற்றி நிர்மலா பெரியசாமி

உங்களுக்கு அவங்க வேண்டாம்னா, நேர்மையாக விவாகரத்து பண்ணிக்கலாம். அது ஒரு சட்டப்படி இருக்குற வழி. ஆனா விவாகரத்து பண்ணினா சம்பாதிச்ச பணத்துல பகிர வேண்டி வரும். அதனால அதை தவிர்க்கிறதுக்காக இப்படி நடந்து கொள்வது சரியா? பழிவாங்குற மாதிரி எந்த ஆணும் இப்படி செய்யக்கூடாது." இன்று நிர்மலா பெரியசாமி பேசி இருக்கிறார். இப்படி அவர் கடுமையாக பேசியிருப்பது தான் இந்த வீடியோ வைரலாக காரணமாகி இருக்கிறது.

இயக்குநர் சமுத்திரக்கனி ஆதங்கம்

இதற்கிடையில், விஜய் குறித்து திரையுலகத்திலிருந்து வரும் கருத்துகளும் மீண்டும் பேசப்பட ஆரம்பித்திருக்கின்றன. நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி முன்பு விஜயைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய நண்பர்களுடன் பேசி இருந்தார். அதில் இந்த கட்சி இப்போதுதான் நல்லபடியா மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் இவர் இந்த நடிகையோட இப்படி கல்யாண பங்க்ஷனுக்கு போகணுமா? இவர் யாரை பழிவாங்கறதுக்காக இப்படி பண்ணுறாரு? என்று பேசியிருந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்படுகிறது.

இந்த கருத்தை வைத்து, விஜய் ரசிகர்கள் அவரை ஆதரித்து வருகிறார்கள். "ஒரு நிகழ்ச்சிக்கு யாருடன் போனார் என்பதைக் கொண்டு ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது" என்பதும் அவர்கள் வாதமாக உள்ளது.

மற்றொரு பக்கம், சில அரசியல் மற்றும் சமூக விமர்சகர்கள், "பொது வாழ்கையில் இருக்கும் ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு அளவு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக குடும்பம், மனைவி, குழந்தைகள் குறித்து பொது வெளியில் பேசப்படும் விஷயங்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இப்படிப்பட்ட செயல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+