Thenmozhi BA serial: ஊராட்சி மன்றத் தலைவருக்கு தண்ணி சோறு ஊறுகா...!
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் சீரியலில், ஊராட்சி மன்றத் தலைவருக்கு தண்ணி ஊத்தின சோறும், ஊறுகாயும் சாப்பிட கொடுக்கறாய்ங்க.
பதவிக்காக ஏமாத்தி கல்யாணம் செய்துகிட்டு, பிற்பாடு அந்த பெண்ணை கண்டுக்காம இருக்கற கதைதான் தேன்மொழி பிஏ சீரியல் கதை.
இது போல நிஜத்திலும் நடக்குது... இதை பார்த்தாவது ஊராட்சி மன்றத் தலைவரா இருக்கறவங்க சூதானமா இருந்துகிட்டா நல்லது.

நிக்கறது பின்னால
பெண்களுக்கு அரசு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீடு அளிக்கிறது. அந்த தொகுதியில் பெண்கள் நிக்கறது. பின்னால நின்னு ஆண்கள் இயக்கறது. அதை விட அந்த பெண்ணை காலம் காலமா நின்னு ஜெயித்து இருக்கும் ஆண்ட கட்சிக்களை சார்ந்த ஆண்கள் இயக்கறதுன்னு அவலங்கள் நடந்துக்கிட்டுத்தான் இருக்குது.

இட ஒதுக்கீடு
இருந்தும், தெரிந்தும் இந்த இட ஒதுக்கீடு எல்லாம் எதற்காக என்று கேட்கும்படிதான் எல்லாமே நாட்டில் நடக்குது. அதை எடுத்துக் காட்டுவதாகவே தேன்மொழி பிஏ ஊராட்சி மன்ற தலைவர் சீரியல் இருக்குது. விளையாட்டா நகைச்சுவையாக இந்த சீரியல் கதை இருந்தாலும், சீரியஸா இருக்க வேண்டிய இடத்தில் சீரியஸாகத்தான் இருக்கிறது.

பதவி வெறி
பதவி வெறிப் பிடித்தவர்களை தோலுரித்து காண்பிக்கும் சீரியல் தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் சீரியல், இது போல கதையை உண்மையில் பலர் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லைதான் அவர்களுக்கு உண்மையை தக்க நேரத்தில் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு விஜய் டிவியின் இந்த சீரியல்.

சாதாரண பதவி
ஊராட்சி மன்றத் தலைவர் பதவிதான் என்ன பெரிய பதவி என்று சாதரணமாக நினைத்து விடுகிறோம். ஆனால், ஒவ்வொரு கிராமத்திலும் சென்று பார்க்கும்போது அதற்கான நல்ல வாய்ப்பும், அதை தவறாக பயன்படுத்திக் கொண்டால் என்னென்ன விளைவுகள் கிடைக்கும் என்பதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.
சீரியலைப் பார்த்து திருந்தினால் சரி, பதவியில் இருப்பவர்கள் தொடர்ந்து பார்க்க, கதையை நன்றாக கொண்டு போக வேண்டும்.












Click it and Unblock the Notifications