ஜீவாவின் மாற்றத்தை கேட்டு மாமனாரின் பிளான்..அம்மாவால் தனத்திற்கு தெரியாமல் முல்லை எடுத்த முடிவு

மீனா, மூர்த்தியை ஜீவா எதிர்த்து பேசியதை தன்னுடைய அப்பா அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீவாவும் மீனாவும் திருமணத்திற்கு தனியாக வந்திருக்கின்றனர். குடும்பத்தினர் வரவில்லையா என்று மீனாவின் அப்பா, அம்மா கேள்வி கேட்கின்றனர்.

மூர்த்தியை ஜீவா எதிர்த்து பேசியதை கேட்டு மீனாவின் அம்மா, அப்பா சந்தோஷம் அடைகின்றனர்.

மீனாவின் தங்கை திருமணத்திற்கு மொய் வைப்பது குறித்து தனமும் மூர்த்தியும் புது முடிவு எடுத்திருக்கின்றனர்.

முல்லையிடம் அவருடைய அம்மா தனியாக திருமணத்திற்கு மொய் வைக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

சந்தோசப்படும் மீனாவின் அப்பா

சந்தோசப்படும் மீனாவின் அப்பா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 15வது நாளுக்கான எபிசோட்டின், ஆரம்பத்தில் மீனாவின் அம்மா வீட்டிற்கு வரும் ஜீவாவும் மீனாவும் கல்யாண வேலைகளை குறித்து பேசிகின்றனர். பிறகு தான் மற்ற வேலைகளை போய் பார்க்கிறேன் என்று ஜீவா கிளம்பி விடுகிறார். மீனா தனது பெற்றோரிடம் வீட்டில் நடந்த விஷயங்களை கூறுகிறார். மூர்த்தியை ஜீவா எதிர்த்து பேசியதை பற்றி அனைத்து விஷயத்தையும் மீனா உளறியதை கேட்டு மீனாவின் அப்பாவும் அம்மாவும் மாப்பிள்ளை மூர்த்தியை எதிர்த்து பேசினாரா? என வியப்போடு கேட்கின்றனர். பின்னர் அந்த குடும்பத்தை விட்டு விட்டு நம்ம வீட்டுக்கு இவங்க வந்தாலே போதும் என்று மீனாவின் அப்பா மனதிற்குள்ளே யோசிக்கிறார்.

குடும்பத்தினரின் முடிவு

குடும்பத்தினரின் முடிவு

அடுத்ததாக வீட்டில் தனம், மூர்த்தி உட்பட எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மீனா தங்கையோட கல்யாணத்துக்கு சீக்கிரமே போகணும் என்று ஜீவா நடந்து கொண்ட விதம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் எல்லாரையும் அமைதியாக இருக்கச் சொல்கிறார். எல்லோரும் கல்யாணம் முடிந்த பிறகு இதைப் பற்றி பேசிக் கொள்ள சொல்லலாம் என்று நாமும் கல்யாண வீட்டுக்கு போகணும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். கதிர் நான் ஜீவாவுக்கு போன் பண்ணேன் எடுக்கவில்லை என்று சொல்ல, முல்லை நான் பேசினேன் அவர் வேலையில் பிஸியாக இருப்பதாக சொன்னார் என்று சொல்கிறார். அனைவரும் ஈவ்னிங் கல்யாணத்துக்கு போகலாம் என்று பேசி முடிவெடுக்கின்றனர்.

மொய் பணம் குறித்து ஆலோசனை

மொய் பணம் குறித்து ஆலோசனை

பிறகு கடைக்கு கிளம்பி சென்ற மூர்த்தி சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விட தனம் என்ன இப்பவே வந்து இருக்கீங்க என்று கேட்கிறார். கல்யாணத்துக்கு மொய் வைக்கணும் அதான் பேங்குக்கு போய் பணம் எடுக்கணும் எவ்வளவு பணம் மொய் வைக்கலாம் என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மூர்த்தி 35 ஆயிரம் வைக்கலாம் என்று சொல்ல தனம் 50,000 வைப்போம் என்று சொல்கிறார்.

முல்லை கதிரின் தனி பிளான்

முல்லை கதிரின் தனி பிளான்

அடுத்ததாக முல்லை கதிருக்கு சாப்பாடு வைத்துக் கொண்டிருக்கும்போது முல்லையின் அம்மா போன் செய்து மல்லியின் தம்பிக்கு கல்யாணத்திற்கு மொய் எப்படி வைக்க போறீங்க என்று கேட்கிறார். அதற்கு முல்லை அதெல்லாம் வீட்டிலேயே பார்த்துப்பாங்க என்று கூற, நீங்க தனியா வைங்க என்று கூறுகிறார். அந்த யோசனையை கதிரிடம் முல்லை சொல்கிறார். அதோடு கதிர் ஐயாயிரம் வைத்தால் போதும் தானே!? பிரசாந்துக்கு அப்படியே வைப்போம் என பேசிவிட்டு இருக்கின்றனர். அடுத்ததாக ஐஸ்வர்யாவும் கண்ணனும் கல்யாண வீட்டுக்கு செல்வது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+