Pandian Stores: உனக்கு வெட்கமே இருக்காதாடி! மயிலை அடிக்க பாய்ந்த சரவணன்- பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Subscribe to Oneindia Tamil

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 டிசம்பர் 5ஆம் தேதி எபிசோடில் சரவணன் மற்றும் மயிலுக்கு இடையில் நடக்கும் பிரச்சனை வீட்டில் உள்ளவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மயிலின் தொடர்ச்சியான நாடகங்களால் வேதனை தாங்க முடியாமல் சரவணன் தன் குடும்பத்தினரிடம் உச்சக்கட்ட கோபத்தை வெளியிட்டிருக்கிறார்.

மயிலை பற்றிய உண்மைகள் தெரிந்ததில் இருந்து சரவணன் மனதுக்குள் புழுங்கி அலைகிறார். இந்த விஷயம் தெரியாமல் வீட்டில் உள்ளவர்கள் மயிலுக்கு ஆதரவாக பேசுவது சரவணனுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Pandian Stores serial vijay tv

சரவணனின் தவிப்பு

பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் தொடர்ந்து இதுபற்றி கேள்வி கேட்கும்போதும் சரவணனால் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், சரவணன் அப்பாவிடம் நான் கல்யாணமே வேண்டாம், சாமியாராகப் போறேன்னு தான் சொன்னேன் -நீங்க எதுக்காக எனக்குக் கல்யாணம் வைச்சீங்கனு கடுமையாகக் கேட்டுவிடுகிறான். எப்போதும் இதுபோலப் பேசாத மகன் இப்படிச் சொன்னதால் பாண்டியன் கடுமையாக அதிர்ச்சி அடைகிறார்.

இதற்குப் பிறகு வீட்டுக்கு வந்த பிறகு சாப்பிடும் போதும் சரவணன் மயிலின் முகத்தைக்கூட பார்க்காமல் கோபத்துடன் இருக்கிறான். மயில் அழுது கொண்டே சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறாள். மறுபடியும் கோமதி கேட்கும்போது சரவணன், இப்போ நான் மயில் கூடச் சண்டைப் போடுறது தான் உங்களுக்குப் பிரச்சனை - நான் இனிமேல் உங்க யார் முன்னாலயும் சண்டைப் போடலைஎன்கிறார்.

உடனே பாண்டியன் கோபமாகி, கல்யாணம் பண்ண பொண்ணை வச்சு நிம்மதியா வாழ மாட்டியா என்று திட்டுகிறார். இதனால் தன்னுடைய பொறுமையை இழந்த சரவணன் எழுந்து, இனிமே மயில் அழுகவே மாட்டாப்பா. எல்லாப் பிரச்சனையையும் என் மனசுலயே வச்சுப் புழுங்கிட்டு எங்கயாவது போயிறேன். நீங்க எல்லாரும் சந்தோஷமா இருங்க என்று சொல்கிறான்.

இதைக்கேட்டு கதிர் உள்ளிட்ட அனைவரும் பதறிப்போய் அவனைச் சுற்றி நின்று சமாதானம் செய்கின்றனர். சரவணன் அப்பாவைக் கட்டிப்பிடித்து கதறி அழுகிறான். சரவணன் அழுவதைப் பார்த்த கோமதி அதிர்ச்சியாகி மயிலிடம் போய் நீயாவது என்னன்னு சொல்லு எனக் கேட்கிறாள்.

மயில் நல்லவளைப் போல் நாங்களே இந்த பிரச்சனையை பேசிக்கிறோம் அத்தை என்கிறாள். தொடர்ந்து சரவணன் பக்கத்திலும் வந்து உங்களுக்கு என்னை பிடிக்கலை மாமா. இந்தக் குடும்பத்துக்காக நான் எவ்வளவு கஷ்டத்தை வேணாலும் தாங்கிக்கிறேன் என நடிக்கிறாள்.

இதனால் உச்சக்கட்ட கோபம் அடையும் சரவணன், பக்கத்தில் இருக்கும் பூத்தொட்டியை ஒன்றை எடுத்து அவளை அடிக்க பாய்கிறார். - மொத்தக் குடும்பமும் இதனால் திகைத்து போகிறது. உனக்கு வெட்கமே இருக்காதாடி? இப்பவும் நடிச்சுட்டுத் திரியுற எனக் கேட்கிறான் சரவணன். இதனைத் தொடர்ந்து சரவணன் வீட்டில் உள்ளவர்களிடம் மயில் பற்றிய உண்மையை சொல்வாரா? என்பதை நாளைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் எபிசோடில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+